Saturday, October 29, 2011

விஜயின் 'யோஹன் - அத்தியாயம் 1' பற்றி கௌதம் மேனன் பேட்டி

 
 
 
விஜய் - கெளதம் மேனன் இருவரும் இணையும் படம் 'யோஹன் - அத்தியாயம் 1'. கெளதம் மேனனின் ஃபோட்டான் கதாஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க இருக்கிறார்.
 
இந்நிலையில் இப்படம் கூறித்து கெளதம் மேனன் " 'யோஹன் - முதல் அத்தியாயம்... படத்துக்கு ஏன் அந்த பெயர் ? ஸோ சிம்பிள்! எனக்கு விஜய்யோடு முதல் சந்திப்பு சரியா அமையலை. அடுத்த இரண்டு சந்திப்புகளில் நான் சொன்னது அவரோட எண்ணத்துக்கு எட்டலை. கடைசிச் சந்திப்பில் 'இந்தத் தடவை நான் உங்களை விடப்போறது இல்லை. இனி, மிஸ் பண்ணவே வேண்டாம்'னு அவரே சொன்னார்.
 
நானும் அவரை வெச்சுப் படம் பண்ண ரொம்ப ஆர்வமா இருந்தேன். 'யோஹன்' ஒரு இன்டர்நேஷனல் தமிழ்ப் படமாக இருக்கும். இதில் இன்டர்நேஷனல் ஏஜென்ட் ஆக வர்றார் விஜய். எனக்கும் விஜய்க்கும் இப்படி ஒரு படம் புதுசு. வெளிநாட்டு அசைன்மென்ட்டுக்குப் போன பிறகு, யோஹனின் இரண்டு மாத அனுபவங்கள்தான் முதல் அத்தியாயம்.
 
அடுத்து, ஒவ்வொரு இரண்டு வருஷத்துக்கும் அதன் அத்தியாயங்களை நீட்டிக்க ஆசை. யார் கண்டா... இது ஒரு சீரிஸாகக்கூட அமையலாம். இந்தப் படத்தின் ஆக்ஷன் விஜய்க்கு செம ஃபிட்டா இருக்கும். கதையைக் கேட்டதும் ரஹ்மான் ஆர்வமா மியூஸிக் போட்டுக் கொடுத்துட்டார். உங்க எல்லாரையும் அசரடிப்பான் 'யோஹன்'!'' " என்று தெரிவித்துள்ளார்.



எம்ஜிஆர் - ரஜினி பாணியில் ....விஜய் பேச்சு!

 
 
 
எம்ஜிஆர், ரஜினியின் படங்களின் பார்முலாதான் சினிமாவில் எவர்கிரீன் வெற்றி பார்முலா என்றார் நடிகர் விஜய்.
 
நடிகர் விஜய்யின் `வேலாயுதம்' படம் தீபாவளிக்கு ரிலீசாகி ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படம் வெற்றி பெற்றதால், அதைப் பகிர்ந்து கொள்ள பிரஸ் மீட் வைத்திருந்தார் நடிகர் விஜய்.
 
நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், "நான் நடிச்ச 52 படங்களை விட 'வேலாயுதம்' பெரிய ஹிட்டாகியுள்ளது என்கிரார்கள். கேட்க ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. இப்படியொரு அருமையான படம் கொடுத்த இயக்குனர் ராஜாவுக்கு நன்றி. தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குனராக அவர் வருவார்.
 
ஜெயம் ரவியும் கதை விவாதத்துக்கு வந்தார்...
 
ஜெயம்ரவிக்கும் நான் முக்கியமாக நன்றி சொல்ல வேண்டும். அவரும் இந்த படத்தின் கதை விவாதத்தில் பங்கேற்றார். ராஜாவின் தந்தை எடிட்டர் மோகனும் பல ஆலோசனைகள் சொன்னார்.
 
ஆஸ்கார் ரவிச்சந்திரன் படத்துக்கு தேவையான எல்லா வசதிகளையும் ஏன் எதற்கு என்று கேட்காமல் செய்து கொடுத்தார். விஜய் ஆண்டனி ரீ ரிக்கார்டிங் படத்துக்கு பெரிய பலம். படத்துக்கு பிரிண்ட்கள் அதிகம் போடுறாங்க, தியேட்டர்கள் எண்ணிக்கையும் கூட்டுவதாக செய்திகள் வருகின்றன. இது படம் ஹிட்டானதற்கு அறிகுறி," என்றார் விஜய்.
 
அப்போது ஒரு நிருபர், "உங்கள் படங்களில் எம்ஜிஆர் பாணியில் வந்தது இந்தப் படம்தான் என்பது சரியா?" என்றார்.
 
உடனே விஜய், "எம்.ஜி.ஆர். பார்முலாவில் படம் பண்ண எல்லோரும் ஆசைப்படுவார்கள். அது தவறு அல்ல. எம்.ஜி.ஆர். பாணியில் படம் பண்ணுவது சாதாரணம் அல்ல. அது போல நடிக்க நல்ல கதை அமையணும். அது 'வேலாயுதம்' படத்தில் இருக்கு," என்றார்.
 
தொடர்ந்து, " ஆரம்பத்தில் நீங்கள் ரஜினி பாணியில் நடிப்பதாகச் சொன்னீர்கள். இப்போது எம்ஜிஆர் பாணி என்கிறீர்கள்," என்றனர் நிருபர்கள்.
 
அதற்கு பதிலளித்த விஜய், "எம்ஜிஆர், ரஜினி படங்களின் பார்முலா என்றுமே எவர்கிரீன். நான் ஆரம்பத்திலிருந்தே இதை சரியான வாய்ப்பு கிடைக்கும்போது பயன்படுத்தியுள்ளேன். மறுக்கவில்லை," என்றார்.
 
நெட்டில் விடாதீங்க...
 
மேலும் அவர் கூறுகையில், "கிளைமாக்சில் கூட்டத்தினர் பிடித்து வரும் கொடிகள் எனது மக்கள் இயக்க கொடி அல்ல.
 
இந்தப் படம் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரனை மகிழ்வித்துள்ளது. நான் இப்போதுதான் அவரைச் சந்தித்துவிட்டு வருகிறேன். ஹேப்பியா சார் என்று கேட்டேன். அவரோ, "கவலையே இல்ல.. படம் சூப்பர் ஹிட். நான் பார்த்துக் கொள்கிறேன்," என்றார். இதைவிட வேறு என்ன வேண்டும்.
 
இண்டர்நெட்டில் வேலாயுதம் படம் வந்ததாக தகவல் வந்தது. அதை தடுக்க எனது இண்டர்நெட் ரசிகர்கள் முயற்சி எடுத்துள்ளனர். புதுப்படங்களை இது போல் இண்டர்நெட்டில் வெளியிடுவதை தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
 
நான் ஒரே பாணியில் நடிப்பதாக சொல்வது தவறு. 'காவலன்' படத்தில் என் பாணி இல்லை. சித்திக் வேறு மாதிரி அப்படத்தை எடுத்தார். கதைக்கு என்ன தேவையோ அதை மட்டும் செய்வேன்.
 
அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் நடிப்பது குறித்து விரைவில் அறிவிப்பு வரும். யோஹன் அடுத்த வருடம் ஆரம்பமாகும். சீமான் படம் குறித்து பின்னர் சொல்கிறேன்," என்றார்.
 
நிகழ்ச்சியில் பங்கேற்ற இயக்குநர் ராஜா கூறுகையில், வாழ்க்கையில் எனக்கு மிகப் பெரிய திருப்பம் தந்த படம் வேலாயுதம். அதற்கு காரணமான விஜய், ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரனுக்கு நன்றி என்றார்.



Velayudham Makes an Impressive Start

 
 
Aascar Ravichandran, Vijay and Jeyam Raja are keeping their fingers crossed as they are sure as shooting stars with 'Velayudham'. Having filmed nearly for a year, the makers had smart strategies of promoting the film not only in Tamil Nadu, but across the neighboring states as well.

Ilayathalapathy Vijay fans in Karnataka as the actor enchanted him with this fluent lines in Kannada. It is worth mentioning that the actor has huge fans following him in Kerala and the film is released nearly in more than 120 theatres.

The plans for advance bookings opened yesterday across all the theatres. Within few hours, the tickets for next 5 days were sold out and additional shows are to be screened as per the requests of fans. Sathyam multiplex has the film screened at its main theatre and most of the multiplexes have more shows.

நண்பனை பற்றி பேசும் விஜய்

 
 

நம்ம படத்தைப் பத்தி நாமளே ரொம்பப் பேசக் கூடாதுங்ணா. இந்தப் படத்துக்கு அப்புறம் பெரிய ஹீரோக்கள் பட வாய்ப்பு ராஜாவுக்கு வரும்.
பெரிய இயக்குநர்கள் இன்னும் நம்பி என்னை ஃபிக்ஸ் பண்ணுவாங்க கண்களில் தொக்கி நிற்கும் டிரேட் மார்க் புன்னகையுடன் பேட்டியை ஆரம்பிக்கிறார் விஜய்.
ஷங்கர் – விஜய் காம்பினேஷன் சந்தோஷம்… எப்படி வந்திருக்கு 'நண்பன்'?
ஷங்கர் சார் என் அப்பாகிட்ட அசிஸ்டென்டா இருந்தப்பவே பழக்கம்தான். அப்பப்போ அவர்கிட்ட பேசி இருக்கேன். ஆனா, இன்னைக்கு இருக்குற ஷங்கர் வேற. படத்தின் ஒவ்வொரு ஃப்ரேமையும் அவர் பிளான் பண்ற மெத்தட் சிம்ப்ளி சூப்பர் ஷங்கர் சார் படத்தில் ஈஸியா நடிச்சிடலாம். ஏன்னா, அவரே நடிச்சுக் காட்டிருவார். அவர் இன்னைக்கு இந்திய அளவில் பிரபலமான டைரக்டர். அந்தப் பேர் சும்மா வந்தது இல்லை. என்னைக் கேட்டா, அவரை 'இந்தியாவின் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்'னு சொல்வேன். நான் எப்பவோ அவரோட இயக்கத்தில் நடிச்சிருக்க வேண்டியது. ஆனா, வேற வேற காரணங்களால் தள்ளிப்போச்சு. இப்போ கச்சிதமா செட் ஆகி இருக்கு. 'த்ரீ இடியட்ஸ்' இந்திப் படம் மொழி எல்லை எல்லாம் தாண்டி இந்தியாவையே வசீகரிச்சது. அதை இன்னும் அழகேத்தி உருவாக்கி இருக்கிறார் ஷங்கர் சார்!
ஜீவா, ஸ்ரீகாந்த்கூட ஃப்ரெண்ட் ஆகிட்டீங்களா?
ஜீவா ரொம்ப ஜாலி. டேக்குக்குப் போற அந்த விநாடி வரை கமென்ட் அடிச்சுட்டே இருப்பார். அவர் ஸ்பாட்ல இருந்தா யூனிட்டே சந்தோஷமா இருக்கும். ஸ்ரீகாந்த் முன்னாடியே எனக்கு ஃப்ரெண்ட்தான். இப்ப இன்னும் க்ளோஸ் ஆயிட்டார். சத்யராஜ் சார்கிட்ட நிறையப் பேசிக்கிட்டே இருந்தோம். நாங்க ஷூட்டிங் ஸ்பாட்டில் நட்பாகப் பழகினது ஃப்ரேமில் நல்லாவே தெரியும். நல்ல கதையில் இப்படி ஒரு டீமோட நடிச்சது எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. இப்போ ஷூட்டிங் முடிஞ்சதும் எங்க டீமை நான் ரொம்ப மிஸ் பண்றேன்.
கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிக்க எப்படித் தயார் ஆகிட்டு இருக்கீங்க..?
பொது நண்பர் ஒருத்தர் மூலம்தான் கௌதம் மேனன் என்னை இயக்க ஆசைப்படுவதுபத்தித் தெரிஞ்சுக்கிட்டேன். சந்திச்சோம். அவர் சொன்ன கதை ரொம்பப் பிடிச்சிருந்தது. இங்கேயும் அமெரிக்காவிலும் நடக்கும் கதை. கௌதம் படம் எப்பவும் ஸ்டைலிஷா இருக்கும். 'யோஹன்ஷ படத்துக்காக என் லுக், பாடி லாங்குவேஜ்னு எல்லாத்தையும் டியூன் பண்ணிட்டு இருக்கேன். அடுத்து ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கப் போறேன். இப்படி ஷங்கர், முருகதாஸ், கௌதம்னு காம்பினேஷன் அமையுறது நல்ல விடயம்.

வேலாயுதம் - விமர்சனம்

 
 

குண்டு வெடிப்புகள் நிகழ்த்தி நாட்டை சீர்குலைக்க ஊடுரவும் தீவிரவாதிகளுடன் மோதும் இளைஞன் கதை...
ஜய்யின் ஆக்ஷன் பார்முலா இயக்குனர் எம்.ராஜாவின் அழுத்தமான கதையாக்கம் பிரமாண்ட காட்சி கலவையுடன் படம் விறுவிறுப்பாய் எகிறுகிறது...
கதை பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் எல்லையில் துவங்குகிறது. தமிழக உள்துறை மந்திரியை தீவிரவாதிகள் கடத்தி செல்லும் ஹெலிகாப்டர் அங்கு இறங்குகிறது. அவர்களிடம் மந்திரி மண்டியிட்டு சென்னையில் குண்டு வெடிப்புகள் நடத்த உதவுதாக வாக்குறுதி அளிக்கிறார். அதன்படி தீவிரவாதிகள் சென்னைக்குள் ஊடுருவுகின்றனர்.
மந்திரி தயவில் நடக்கும் கள்ள நோட்டு அச்சடிப்பு இளம்பெண் கடத்தல் என சமூக விரோத செயலில் ஈடுபடும் கும்பலை பத்திரிகை நிருபர் ஜெனிலியா வெளிச்சத்துக்கு கொண்டு வர முயற்சிக்கிறார். அவரை ரவுடிகள் பிடித்து குத்தி சாய்க்கின்றனர்.
ஜெனிலியாவின் இரு கூட்டாளிகளை கொல்கின்றனர். அதிர்ஷ்டவசமாய் உயிர் பிழைக்கும் ஜெனிலியா தீவிரவாதிகள் குண்டு வெடிப்பு சதியை கண்டு பிடித்து அதை கடிதமாக எழுதி வைக்கிறார். குண்டு வெடிப்பை தடுப்பேன் என உறுதி அளித்து கீழே வேலாயுதம் என கையெழுத்து போட்டு விட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேருகிறார்.
கிராமத்தில் பால் விற்கும் தொழில் செய்யும் வேலாயுதமான விஜய் தங்கை சரண்யாமோகன் திருமணத்துக்காக சீட்டு கட்டி சேர்த்து வைத்த பணத்தை வாங்க சென்னையில் உள்ள சிட்பண்ட் நிறுவனத்துக்கு வருகிறார். அப்போது ரெயில் நிலையத்தில் தீவிரவாதிகள் பதுக்கிய வெடிகுண்டு மோட்டார்சைக்கிளில் ஏறி திருடனை விரட்டி போய் வெளியில் நிறுத்த அங்கு வெடிக்கிறது.
பயணிகள் காப்பாற்றப்படுகின்றனர். இது போல் கூட்டம் கூடும் பகுதியில் இருக்கும் இன்னொரு வெடிகுண்டு சூட்கேசை எடுத்து தவறி விட்டு போனதாக நினைத்து அதை வைத்தவரிடமே கொண்டு கொடுக்க அங்குள்ள ரவுடி கும்பல் வெடித்து சிதறுகின்றனர். உருவம் தெரியாத வேலாயுதத்தை மக்கள் கடவுளாக கொண்டாடுகிறார்கள்.
ஜெனிலியாவுக்கு விஷயம் தெரிகிறது. விஜய்யிடம் மக்கள் அவரை வேலாயுதமாக கருதுவதை உணர்த்துகிறார். நிஜமாகவே வேலாயுதமாக மாறி தீவிரவாதிகளை அழிக்க நிர்ப்பந்திக்கிறார். ஒரு கட்டத்தில் தான் பணம் போட்ட கம்பெனியை மூடி அங்கிருந்த பணத்தை மந்திரி ஆட்கள் சுருட்டுகின்றனர். பணத்தை இழந்த மக்கள் வேலாயுதம் வந்து எங்களுக்கு பணத்தை வாங்கி கொடுப்பார் என நம்பிக்கை குரல் எழும்புகின்றனர். அதன் பிறகு விஜய் எடுக்கும் வேலாயுதம் அவதாரமும் தீவிரவாதிகளுடன் நடக்கும் சண்டைகளும் மீதி கதை...
காமெடி, சென்டி மென்ட், ஆக்ஷனில் விஜய்யை இன்னொரு தளத்துக்கு தூக்கியுள்ள படம். தங்கை பாசத்தில் சிக்சர் அடிக்கிறார். கோழி பிடிக்க வீட்டு கூரைகளில் தாவி குதித்து ஓடி ஒவ்வொரு வீட்டுக்காரையும் இம்சை படுத்துவது... கிணற்றில் விழுந்த தங்கை மோதிரத்தை எடுக்க உள்ளே தங்கம் இருப்பதாக சொல்லி ஊர்க்காரர்களை தண்ணீர் இறைக்க வைத்து மோதிரத்தை கண்டு பிடித்து கம்பி நீட்டுவது... தங்கை சமைத்த ருசி இல்லாத உணவை நண்பர்களுடன் சாப்பிட்டு புகழ்வது.. என காமெடியர்களை தூக்கி சாப்பிடும் காமெடி பண்ணுகிறார்.
வேலாயுதம் ஆன பின் கதை ஆக்ஷன் ரூட்டுக்கு தாவுகிறது. சிட்பண்ட் பணத்துடன் ஓடும் ரவுடிகளை கடற்கரை யோரம் மோதி அழித்து கடலுக்குள் வீசுவது வேகம்.. ரெயிலை தீவிரவாதிகள் கடத்தி தொழிற் சாலையில் மோத விட்டு விஷ வாயுவை பரப்பி மக்களை கொல்ல முயற்சிப்பதும் விஜய் அதை தடுக்க ஆக்ரோஷமாக மோதுவதும் ஹாலிவுட்டுக்கு இணையான பிரமிப்பு.
விஜய்யின் முறைப்பெண் ஹன்சிகா கிராமத்து தேவதை. பத்திரிகை நிருபர் கேரக்டரில் ஜெனிலியா வலு சேர்க்கிறார். சரண்யா மோகன் பாசக்கார தங்கை. ஊர்க்காரர்களை காப்பாற்ற அவர் செய்யும் தியாகம் உலுக்குகிறது. திருடனாக வரும் சந்தானம் காமெடி கலகலப்பின் உச்சம். மகள் காதலுக்கு உதவும் எம்.எஸ்.பாஸ்கர் சிரிக்க வைக்கிறார். ரெயில் சண்டைக்கு பின் கதை நீள்வதை குறைத்து இருக்கலாம். கமர்சியல் கதையை விறு விறுப்பாக காட்சிப்படுத்தி ஒன்ற வைக்கிறார் இயக்குனர் ராஜா. பிரியன் கேமராவில் பிரமாண்டத்தின் பதிவு. விஜய் ஆண்டனி இசையில் பாடல்கள் கேட்கும் ரகம்.

Velayutham Movie Success Meet Event Stills

 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Velayudham gets massive Collection

 
 

Ilayathalapathy Vijay has once again proved that he is the king of box office in Kollywood. His recent releaseVelayudham, which also has Hansika and Genelia in lead roles, has got a massive opening across the state. Ever since the release of the film, theatres are flooded with Vijay fans to watch their favourite star on screen. The comedy sequence between Santhanam and Vijay is already the talk of the town. Apart from that Vijay's powerful punches, electrifying dance sequence, sister sentiment and songs (especially 'Chillax' and 'Sonna Puriyadhu') make Velayudham a complete entertainer.
And now due to tremendous demand from fans across Tamil Nadu, theatres owners have asked for more prints. The film is produced by Aascar Ravichandran and directed by Jayam Raja.

VIJAY TO HOST TELEVISION SHOW

 
 

Vijay has been signed up to host a television show on the lines of Kaun Banega Crorepati. The star had initially refused to do the show by Vijay TV was insistent that he would be the only right choice.
 
Apparently, Vijay was handed over blank cheque to host this show. Finally, Vijay decided to take up the offer, not for the money but for the immense popularity that it had brought to Amitabh Bachchan and Shah Rukh Khan who had hosted similar shows in Hindi.
 

'Am I Stereotypical?' – Actor Vijay

 
 
Ilayathalapathy Vijay is brimmed with extreme joy over the grand success of his recent release 'Velayudham'. The film was released with 500 prints and much impressed with the grand presentation, the demand has increased for the prints and Aascar Ravichandran is very much excited.

Actor Vijay along with director Raja and music director Vijay Anthony was present for the media interaction session last evening. While addressing the media channels, actor Vijay said, "I am very much disappointed to hear that I have been performing stereotypical roles, which is absolutely false. 'Kaavalan' wasn't my style of movie as it didn't have any punch dialogues, opening song. I didn't use my Makkal Iyakkam flag during climax of 'Velayudham'. 'Nanban' is completely different from my usual films."

Actor Vijay is sure as shooting stars with his upcoming movies that includes 'Nanban' scheduled to hit screens for Pongal followed by Gautham Menon's 'Yohan: Adhyayam Ondru' scheduled for Diwali 2012.

Popular Posts

Popular Posts