Actor Vijay News , Ilayathalapathy Vijay - Official news Channel , Ilayathalapathy Vijay, Ilayathalapathy Vijay breaking news
Thursday, December 29, 2011
பொங்கல் போட்டி
வரும் பொங்கலுக்கு 'நண்பன்', 'வேட்டை', மற்றும் '3' போன்ற படங்கள் ரிலீசுக்கு தயாராகிவிட்டன. இதில் ஷங்கர் இயக்கத்தில் நண்பன், லிங்குசாமி இயக்கத்தில் வேட்டை மற்றும் ஐஸ்வர்யா இயக்கத்தில் '3' படங்களுக்கு இடையே பலத்த போட்டி ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஷங்கர் படத்திற்கு தனி ரசிகர்கள் கூட்டம் உண்டு, தற்போது அவர் இளைய தளபதி விஜய்யுடன் கூட்டணி வைத்திருப்பதால் 'நண்பன்' படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு உண்டு. இந்தியில் வெளியான '' படத்தின் ரீமேக் படம் தான். ஆனாலும் இந்த படத்தை பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்க உள்ளதால் புதுமைக்கு பஞ்சம் இருக்காது. அதே போல் லிங்குசாமியின் 'வேட்டை' படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு உண்டு. லிங்குசாமி படத்திற்கு விறுவிறுப்பிற்கு பஞ்சம் இல்லை என்பதால் இவரது படத்திற்கு ரசிகர்கள் உண்டு. இந்த படத்தில் மாதவன், ஆர்யா கூட்டணி வெற்றி கூட்டணியாக மாற துடித்துக்கொண்டியிருக்கிறது. அதுமட்டுமின்றி 'why this kolaveri di' பாடல் உலக முழுவதும் சூப்பர் ஹிட், இந்த பாடல் '3' படத்தின் எதிர்பார்ப்பை உச்சத்தில் கொண்டு போய் நிறுத்தியுள்ளது. தனுஷின் துடிப்பான நடிப்பும் படத்திற்கு மிக பலம் சேர்க்கும். சூப்பர் ஸ்டாரின் மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்கியிருக்கும் முதல் படமே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பொங்கல் தமிழ் சினிமாவிற்கு ஆரோக்கியமான போட்டியை தரும் என்தில எந்தவித சந்தேகமும் இல்லை.
விஜயை பிடிக்காதவர்களுக்கு, நண்பன் படத்தை பார்த்தால், பிடிக்கும்
"நடிகர் விஜயை அனைவருக்கும் பிடிக்கும். யாருக்கெல்லாம் பிடிக்காதோ அவர்களுக்கும் நண்பன் திரைப்படத்தை பார்த்தால் அவரை பிடிக்கும்." என்று இயக்குனர் ஷங்கர் கூறியுள்ளார். கோவையில் நண்பன் படத்தின் பாடல் வெளியீடு நடந்தது. ஷங்கர் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசுகையில், எந்திரன் திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக மும்பை சென்றிருந்தோம். அங்கு தேசிய நெடுஞ்சாலையில் படப்பிடிப்பு நடத்த முடிவு செய்தோம். ஆனால் அன்றைய தினம் அனுமதி கிடைக்கவில்லை. படப்பிடிப்பை ரத்து செய்து விட்டு, "த்ரி இடியட்ஸ்" திரைப்படத்தைப் பார்க்கச் சென்றேன்.
திரையரங்கை விட்டு வெளியே வரும்போது இந்த படத்தை தமிழில் எடுக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. நண்பன் திரைப்படம் சிறப்பாக வந்துள்ளது. ரஜினிகாந்துக்கு பிறகு கடமையுணர்வு மிக்க நடிகராக விஜய் இருக்கிறார். நடிகர் விஜயை அனைவருக்கும் பிடிக்கும். யாருக்கெல்லாம் பிடிக்காதோ அவர்களுக்கும் நண்பன் திரைப்படத்தை பார்த்தால் அவரை பிடிக்கும். சிவாஜி, எந்திரன் படங்களில் நடிக்க அழைத்தபோது சத்யராஜ் மறுத்தார். நண்பனில் வில்லன் கேரக்டரில் நடித்துள்ளார். நிச்சயம் அவர் எனக்காக இந்த படத்தில் நடிக்கவில்லை. அவர் ஒரு சீனியர் நடிகர் என்பதை நிரூபித்துவிட்டார்.
திரையரங்கை விட்டு வெளியே வரும்போது இந்த படத்தை தமிழில் எடுக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. நண்பன் திரைப்படம் சிறப்பாக வந்துள்ளது. ரஜினிகாந்துக்கு பிறகு கடமையுணர்வு மிக்க நடிகராக விஜய் இருக்கிறார். நடிகர் விஜயை அனைவருக்கும் பிடிக்கும். யாருக்கெல்லாம் பிடிக்காதோ அவர்களுக்கும் நண்பன் திரைப்படத்தை பார்த்தால் அவரை பிடிக்கும். சிவாஜி, எந்திரன் படங்களில் நடிக்க அழைத்தபோது சத்யராஜ் மறுத்தார். நண்பனில் வில்லன் கேரக்டரில் நடித்துள்ளார். நிச்சயம் அவர் எனக்காக இந்த படத்தில் நடிக்கவில்லை. அவர் ஒரு சீனியர் நடிகர் என்பதை நிரூபித்துவிட்டார்.
ஜேம்ஸ் பாண்டு ஆகிறார் விஜய்
கௌதம் மேனன் இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடிக்கும் படம் 'யோஹன் : அத்தியாயம் ஒன்று'. ஆக்ஷன் ப்ளஸ் த்ரில்லர் கலந்த இந்தக் கதை சீனா உட்பட பல வெளிநாடுகளில் உருவாகிறது. இந்த படம், ஜேம்ஸ் பாண்டு கதை போல, நிறைய அத்தியாயங்கள் இருக்கும் என தெரிகிறது. மேலும் இந்த படத்தில் விஜய் ஜேம்ஸ் பாண்டு போல ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறாராம்.
விஜய் படத்துக்கு, ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த தீம் சாங் ரெடி
முக்கிய இயக்குனர்களின் படங்களில் நடிக்க ஆரம்பித்திருக்கும் விஜய், அடுத்து ஆண்டு கௌதம் மேனன் இயக்கத்தில் நடிக்கிறார். படத்திற்கு 'யோஹன் : அத்தியாயம் ஒன்று' என பெயரிட்டுள்ளனர். இது ஆக்ஷன் த்ரில்லர் படம் என்பதுதான் விஷேசம். இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான், தாமரை காம்பினேஷனில் பாடல்கள் உருவாகின்றன. படத்தை கௌதம் வாசுதேவ் மேனனின் சொந்த நிறுவனமான ஃபோட்டான் கதாஸ் தயாரிக்கிறது. தற்போது கௌதம் மேனனுடன் இணைந்து ஈராஸ் இண்டர்நேஷனல் நிறுவனமும் யோஹன் அத்தியாயம் ஒன்று படத்தை தயாரிக்க உள்ளனர். இதனையடுத்து, கௌதம் மேனன், தற்போது தயாரித்து இயக்கி வரும் 'நீ தானே என் பொன்வசந்தம' படத்திற்கு இசையமைக்க ஏ.ஆர்.ரகுமானை தேர்வு செய்தார். ஆனால் படு பிசியாக ரகுமான் இருப்பதால், அடுத்த முறை இசையமைக்கிறேன் என்று கூறிவிட்டாராம் ரகுமான். ஆனால் கௌதம் மேனன் இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடிக்கும் படத்திற்கு, தான் இசை அமைப்பதாக கூறியதோடு, படத்திற்கு தீம் சாங் ஒன்றை காம்போஸிங் செய்து முடித்துவிட்டாராம் ஏ.ஆர்.ரகுமான்.
நண்பன் திரைப்படத்தின் புதிய தகவல்கள்
| தமிழ் திரையுலகில் ஷங்கரின் இயக்கத்தில் உருவாகியுள்ள நண்பன் திரைப்படத்தில் வரும் புதிய தகவல்கள் வெளிவந்துள்ளன. |
| தமிழ் திரையுலகில் நண்பன் திரைப்படத்தில் இளையதளபதி விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த், எஸ்.ஜே.சூர்யா, சத்யராஜ், சத்யன், இலியானா மற்றும் பலர் நடித்து இருக்கிறார்கள். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து இருக்கிறார். 2012 பொங்கலுக்கு நண்பன் திரைக்கு வர இருக்கிறது. நண்பன் படத்தின் பாடல்கள் குறித்தும் படம் குறித்தும் சில தகவல்கள்: * ஒரு பாடலுக்கு பாடகர்கள் அனைவரது வாய்களில் சரியான அளவு தண்ணீரை வைத்துக் கொண்டு ஹாரீஸ் ஜெயராஜ் பாட வைத்து இருக்கிறார். * படப்பிடிப்பு எப்போதுமே கலகலப்பாக நடந்ததற்கு காரணம் ஜீவா தான். ஷாட் ரெடி! என்றவுடன் அந்த கதாபாத்திரமாகவே ஆகிவிடுவாராம் ஜீவா. கலகலப்பில் விஜய்யை கூட ஜீவா விட்டு வைக்கவில்லை என்பது தான் இதில் சிறப்பான விடயமாகும். * படக்குழுவினர் அனைவருமே கூறுவது இயக்குனர் ஷங்கருக்குள் ஒரு அற்புதமான நடிகர் இருக்கிறார் என்பது தான். எந்த ஒரு காட்சியாக இருந்தாலும் அதில் எப்படி நடிக்க வேண்டும் என்று அப்படியே நடித்து காட்டுவது ஷங்கரின் சிறப்பம்சமாகும். * படத்தின் விஜய்யின் பெயர் பஞ்சவன் பாரிவேலு, ஜீவாவின் பெயர் சேவற்கொடி செந்தில், ஸ்ரீகாந்தின் பெயர் வெங்கட்ராம கிருஷ்ணன், இலியானாவின் பெயர் ரியா, சத்யராஜின் பெயர் விருமாண்டி சந்தனம். * HEART-ல் BATTERY என்ற பாடலில் வரும் வித்தியாசமான இசை அனைத்துமே மக்களிடம் இருந்து பதிவு(RECORD) செய்து பாட்டில் இணைத்து இருக்கிறார்கள். * ஏ.ஆர்.ரஹ்மானிடம் அவர் அப்பா நீ பெரிய கிரிக்கட் வீரராக வர வேண்டும் என்று சொல்லி இருந்தாலும், சச்சினிடம் அவரது அப்பா நீ பெரிய இசையமைப்பாளராக வர வேண்டும் என்று சொல்லி இருந்தாலும் என்ன நடந்து இருக்கும் சொல்லு என்பது போன்ற வசனங்கள் நண்பனில் இடம்பிடித்துள்ளது. |
நண்பன் இசை வெளியீட்டுக்கு இலியானா வராதது ஏன்?
சங்கர் இயக்கத்தில் விஜய் நடிக்கும் பிரமாண்ட படமான நண்பன் பட பாடல் வெளியீடு கோவையில் டிசம்பர் 23 ம் திகதி இடம்பெற்றது. இவ் பிரமாண்ட விழாவுக்கு பலர் கலந்து கொண்டனர் ஆனால் படத்தின் கதாநாயகி இலியான வரவில்லை.
விஜய் ஜீவா சிறிகாந்த் எஸ்.ஜே.சூர்யா சத்தியன் அனுயா மற்றும் பலர் இவ்விழா நடப்பதற்கு முதல் வந்தனர். ஆனால் விழா தொடங்கிய பின்னும் இலியான வரவில்லை. ஆனால் இலியான கட்டயாம் வருவார் என கூறப்பட்டது. அதன் பின் இலியானாவோடு தொடர்பு கொண்டபோது ஹிந்தி படப்பிடிப்பில் தொடர்ந்து பங்கு கொண்டதால் அவர் உடல் நலம் சரி இல்லாததால் வரவில்லை என கூறப்பட்டது.
விஜய் ஜீவா சத்தியராஜ் சிறிகாந்த் அனுஜா இலியான சத்தியன் ராகவா லோரன்ஸ் எஸ்.ஜே.சூர்யா மற்றும் பலர் நடிக்க சங்கர் இயக்கத்தில் ஹரிசின் இசையில் ஜெமினி பிலிம் தயாரிப்பில் இப்படம் பொங்கல் வெளியீடாக 2012 ம் ஆண்டு உலகம் முழுவதும் வெளிவர உள்ளது. மேலதிக தகவலுக்கு இணைந்திருங்கள்.
விஜய் ஜீவா சிறிகாந்த் எஸ்.ஜே.சூர்யா சத்தியன் அனுயா மற்றும் பலர் இவ்விழா நடப்பதற்கு முதல் வந்தனர். ஆனால் விழா தொடங்கிய பின்னும் இலியான வரவில்லை. ஆனால் இலியான கட்டயாம் வருவார் என கூறப்பட்டது. அதன் பின் இலியானாவோடு தொடர்பு கொண்டபோது ஹிந்தி படப்பிடிப்பில் தொடர்ந்து பங்கு கொண்டதால் அவர் உடல் நலம் சரி இல்லாததால் வரவில்லை என கூறப்பட்டது.
விஜய் ஜீவா சத்தியராஜ் சிறிகாந்த் அனுஜா இலியான சத்தியன் ராகவா லோரன்ஸ் எஸ்.ஜே.சூர்யா மற்றும் பலர் நடிக்க சங்கர் இயக்கத்தில் ஹரிசின் இசையில் ஜெமினி பிலிம் தயாரிப்பில் இப்படம் பொங்கல் வெளியீடாக 2012 ம் ஆண்டு உலகம் முழுவதும் வெளிவர உள்ளது. மேலதிக தகவலுக்கு இணைந்திருங்கள்.
விஜய் சொன்ன அஸ்க் லஸ்கா... மதன் கார்க்கி
இலியானாவைப் பார்த்து சிரித்த விஜய், 'அஸ்க் லஸ்கா' என்று பாடியதும் இலியும் சிரித்தார். இந்த ரகளையான பாடல் இடம் பெற்ற படம் ஜெமினி பிலிம் சர்க்யூட்டுக்காக ஷங்கர் இயக்கியிருக்கும் 'நண்பன்'. அதென்ன 'அஸ்க் லஸ்கா?' என்று தேடிப் பார்த்தால், அதற்கு அநேகமாக இந்தியாவுக்குள் அர்த்தம் தேட முடியாது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் அமைந்திருப்பதால் 'ஒமகசீயா' போல பொத்தாம் பொதுவில் எழுதப்பட்ட வார்த்தையும் கிடையாது. இதன் பொருள் சொல்லக்கூடிய ஒரே ஒருவர், பாடலை எழுதியிருக்கும் மதன் கார்க்கி மட்டுமே.
'கோ'வில் இடம்பெற்ற 'என்னமோ, ஏதோ...' பாடலில் அரிதான தமிழ் வார்த்தைகளைக் கொண்டே அசத்திய மதன் கார்க்கி, 'ஏழாம் அறிவி'ல் முதல் முதலாக தமிழ்ப் படத்தில் சீன மொழிப் பாடலை எழுதி சிலிர்க்க வைத்தார். அந்த வரிசையில் இடம்பெறத் தக்க பாடலாகிறது 'அஸ்க் லஸ்கா'.
''இதுல 'அஸ்க்'ங்கிறது துருக்கிய மொழி வார்த்தை. 'லஸ்கா' ங்கிறது ஸ்லோவேக்கிய மொழி வார்த்தை. இரண்டுக்கும் அர்த்தம் ஒன்றேதான். அது, 'காதல்'... இதே போல இந்தப் பாடல்ல பதினாறு உலக மொழிகள்ல காதலைக் குறிக்கிற வார்த்தைகள் இடம் பெற்றிருக்கு..!'' என்று சிரித்த கார்க்கி தொடர்ந்தார்...
''இலியானாகிட்ட தன் காதலை விஜய் சொல்ற பாடலானதால, அதுக்கு வித்தியாசமான கான்செப்ட் யோசிச்சு இப்படி உலக மொழிகள்ல காதலைச் சொல்ல முடிவாச்சு. இதுக்காக 60 மொழிகள்ல இருந்து காதலுக்கான வார்த்தைகளை சேகரிச்சு அதுல ஹாரிஸோட இசைக்குப் பொருந்தி வர்ற ஒலிகளோடயும், எதுகை மோனைக்குப் பொருத்தமா வர்றது போலவும் இப்படி பதினாறு மொழி வார்த்தைகளைப் பயன்படுத்தினேன். உலக மொழிகளோட தொடர்ற பாடல் அப்படியே இந்திய மொழிகளுக்கும் வந்து தமிழ்ப்பாடலா ஒலிக்கிற விதத்துல எழுதினேன். விஜய் ஒருமுறை அப்பாவை சந்திச்சப்ப இந்தப் பாடலைச் சொல்லி, 'கார்க்கி நல்லா எழுதியிருக்கார்'னு பாராட்டி யிருக்கார்..!''
மேற்படி பாடலோடு ஒரு மாணவனின் ஏமாற்ற மனநிலையைக் குறிக்கும், 'எந்தன் கண்முன்னே காணாமல் போனேனே...' என்ற பாடலையும் எழுதியிருக்கும் கார்க்கி, 'எந்திரனை'த் தொடர்ந்து இந்தப்படத்தில் ஷங்கருடன் சேர்ந்து வசனங்களையும் எழுதியிருக்கிறார்.
''ரோபோ தொழில்நுட்பம் 'எந்திரன்' வசனங்களுக்குத் தேவைப்பட்டதைப் போல இன்றைய கல்வி முறையைப் பற்றிய செய்தி சொல்ற இது எஞ்சினியரிங் கல்லூரி மாணவர்களோட கதையா ஆனதால அப்படி மாணவர்களோடவே பழகி வர்ற பேராசிரியரான எனக்கு இதுல எழுத வாய்ப்புக் கொடுத்தார் ஷங்கர். நான் முழுப்படத்துக்கும் வசனம் எழுத, அவரும் ஒரு லேயர் எழுதி ரெண்டிலும் சிறந்ததை எடுத்துக்கிட்டோம். ஒரிஜினல் 'த்ரீ இடியட்ஸ்' படத்தோட செய்திகளை மாற்றாம இன்னும் சிறந்ததை ஹானஸ்டா சொல்லியிருக்கோம்..!'' என்றார் கல்லூரியில் கல்விக்கும், படங்களில் காதலுக்கும் அர்த்தம் பல சொல்லும் பேராசிரியர் மதன் கார்க்கி.
'கோ'வில் இடம்பெற்ற 'என்னமோ, ஏதோ...' பாடலில் அரிதான தமிழ் வார்த்தைகளைக் கொண்டே அசத்திய மதன் கார்க்கி, 'ஏழாம் அறிவி'ல் முதல் முதலாக தமிழ்ப் படத்தில் சீன மொழிப் பாடலை எழுதி சிலிர்க்க வைத்தார். அந்த வரிசையில் இடம்பெறத் தக்க பாடலாகிறது 'அஸ்க் லஸ்கா'.
''இதுல 'அஸ்க்'ங்கிறது துருக்கிய மொழி வார்த்தை. 'லஸ்கா' ங்கிறது ஸ்லோவேக்கிய மொழி வார்த்தை. இரண்டுக்கும் அர்த்தம் ஒன்றேதான். அது, 'காதல்'... இதே போல இந்தப் பாடல்ல பதினாறு உலக மொழிகள்ல காதலைக் குறிக்கிற வார்த்தைகள் இடம் பெற்றிருக்கு..!'' என்று சிரித்த கார்க்கி தொடர்ந்தார்...
''இலியானாகிட்ட தன் காதலை விஜய் சொல்ற பாடலானதால, அதுக்கு வித்தியாசமான கான்செப்ட் யோசிச்சு இப்படி உலக மொழிகள்ல காதலைச் சொல்ல முடிவாச்சு. இதுக்காக 60 மொழிகள்ல இருந்து காதலுக்கான வார்த்தைகளை சேகரிச்சு அதுல ஹாரிஸோட இசைக்குப் பொருந்தி வர்ற ஒலிகளோடயும், எதுகை மோனைக்குப் பொருத்தமா வர்றது போலவும் இப்படி பதினாறு மொழி வார்த்தைகளைப் பயன்படுத்தினேன். உலக மொழிகளோட தொடர்ற பாடல் அப்படியே இந்திய மொழிகளுக்கும் வந்து தமிழ்ப்பாடலா ஒலிக்கிற விதத்துல எழுதினேன். விஜய் ஒருமுறை அப்பாவை சந்திச்சப்ப இந்தப் பாடலைச் சொல்லி, 'கார்க்கி நல்லா எழுதியிருக்கார்'னு பாராட்டி யிருக்கார்..!''
மேற்படி பாடலோடு ஒரு மாணவனின் ஏமாற்ற மனநிலையைக் குறிக்கும், 'எந்தன் கண்முன்னே காணாமல் போனேனே...' என்ற பாடலையும் எழுதியிருக்கும் கார்க்கி, 'எந்திரனை'த் தொடர்ந்து இந்தப்படத்தில் ஷங்கருடன் சேர்ந்து வசனங்களையும் எழுதியிருக்கிறார்.
''ரோபோ தொழில்நுட்பம் 'எந்திரன்' வசனங்களுக்குத் தேவைப்பட்டதைப் போல இன்றைய கல்வி முறையைப் பற்றிய செய்தி சொல்ற இது எஞ்சினியரிங் கல்லூரி மாணவர்களோட கதையா ஆனதால அப்படி மாணவர்களோடவே பழகி வர்ற பேராசிரியரான எனக்கு இதுல எழுத வாய்ப்புக் கொடுத்தார் ஷங்கர். நான் முழுப்படத்துக்கும் வசனம் எழுத, அவரும் ஒரு லேயர் எழுதி ரெண்டிலும் சிறந்ததை எடுத்துக்கிட்டோம். ஒரிஜினல் 'த்ரீ இடியட்ஸ்' படத்தோட செய்திகளை மாற்றாம இன்னும் சிறந்ததை ஹானஸ்டா சொல்லியிருக்கோம்..!'' என்றார் கல்லூரியில் கல்விக்கும், படங்களில் காதலுக்கும் அர்த்தம் பல சொல்லும் பேராசிரியர் மதன் கார்க்கி.
அமீர்கானோடு என்னை ஒப்பிட வேண்டாம் விஜய்
இப்படம் ஹிந்தி மெகா ஹிட் படமான 3 இடியட்ஸ் பட ரீமேக் ஆகும். சல்மான் மாதவன் சர்மான் ஜோசி ஆகியோர் நடித்தனர்.
நண்பன் படத்தின் ஒரிஜினல் நடிகர்களுடன் நண்பன் பட நடிகர்களை ஒப்பிட வேண்டாம் என படக்குழுவினர் ஏற்கனவே கூறியுள்ளனர். விஜய் இதை மீண்டும் கூறியுள்ளார். நண்பன் பட சல்மான் கானுடன் என்னை ஒப்பிட வேண்டாம் நண்பன் எனது படங்களில் வித்தியாசமான படம் . இப்படம் சங்கரின் முதலாவது ரீமேக் படம் இப்படம் ஹிந்தி படத்தை விட புதுசாக இருக்கும் என்றார். தமிழிற்கு இது ஒரு புதுப்படம் என்றார்.
'துப்பாக்கி'யில் இதுவரை பார்த்திராத புதிய கெட்டப்பில் விஜய்!
துப்பாக்கி படத்துக்காக இதுவரை பார்த்திராத புதிய கெட்டப்பில் வருகிறாராம் நடிகர் விஜய்.
பொதுவாக கெட்டப் மாற்றுவதில் நம்பிக்கை கிடையாது என்று கூறி வருபவர் விஜய்.
'வசீகரா' படத்திற்கு பிறகு நடித்த படங்களில் பாடல்களுக்கு தேவைப்படும் போது மட்டும் தனது கெட்டப்பை மாற்றி வந்தார். காவலன், வேட்டைக்காரன் படங்களில் பாடல் காட்சிகளில் விதவிதமாக விக் மட்டும் மாற்றியுள்ளார். மற்ற எல்லா படங்களிலும் அவரது தோற்றம் ஒரே மாதிரிதான்.
இந்நிலையில் முருகதாஸ் இயக்கத்தில் தற்போது நடித்து வரும் 'துப்பாக்கி' படத்திற்காக தனது கெட்டப்பை மாற்றியுள்ளாராம் விஜய்.
இந்தப் படம் தனது இமேஜை வேறு ரேஞ்சுக்குக் கொண்டு போகும் என அவர் நம்புவதால், மிக அதிக கவனம் காட்டி வருகிறாராம் விஜய். படத்தை குறித்த நேரத்தில் முடித்துவிட அனைத்து வழிகளிலும் இயக்குநருக்கு ஒத்துழைத்து வருகிறாராம்.
மும்பையில் விறுவிறுப்பாக இந்தப் படத்தின் ஷூட்டிங் நடந்து வருகிறது. இந்தப் படம் முடிந்த கையோடு கவுதம் மேனன் படத்தில் நடிக்கப் போகிறார் விஜய்.
நண்பன் : குளோஸ் அப் ! நண்பன் சில தகவல்கள் !!
ஷங்கர் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் படம் ' நண்பன் '. சத்யராஜ், ஜீவா, ஸ்ரீகாந்த், எஸ்.ஜே.சூர்யா, சத்யன், இலியானா மற்றும் பலர் நடித்து இருக்கிறார்கள். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து இருக்கிறார். 2012 பொங்கலுக்கு இப்படம் திரைக்கு வர இருக்கிறது.
நண்பன் படத்தின் பாடல்கள் குறித்தும் படம் குறித்தும் சில தகவல்கள் :
* ஒரு பாடலுக்கு HARMONY பாடகர்கள் அனைவரது வாய்களில் சரியான அளவு தண்ணீரை வைத்துக் கொண்டு பாட வைத்து இருக்கிறார் ஹாரிஸ்.
* படப்பிடிப்பு எப்போதுமே கலகலப்பாக நடந்ததற்கு காரணம் ஜீவா தான். " ஷாட் ரெடி ! " என்றவுடன் அந்த கதாபாத்திரமாகவே ஆகிவிடுவாராம் ஜீவா. கலகலப்பில் விஜய்யை கூட ஜீவா விட்டுவைக்கவில்லை என்பது தான் இதில் ஹைலைட்.
* படக்குழுவினர் அனைவருமே கூறுவது இயக்குனர் ஷங்கருக்குள் ஒரு அற்புதமான நடிகர் இருக்கிறார் என்பது தான். எந்த ஒரு சீனாக இருந்தாலும் அதில் எப்படி நடிக்க வேண்டும் என்று அப்படியே நடித்து காட்டுவது ஷங்கர் ஸ்பெஷல்.
* படத்தின் விஜய்யின் பெயர் பஞ்சவன் பாரிவேலு, ஜீவாவின் பெயர் சேவற்கொடி செந்தில், ஸ்ரீகாந்தின் பெயர் வெங்கட்ராம கிருஷ்ணன், இலியானாவின் பெயர் ரியா, சத்யராஜின் பெயர் விருமாண்டி சந்தனம்.
* 'HEART-ல BATTERY' என்ற பாடலில் வரும் வித்தியாசமான இசை அனைத்துமே மக்களிடம் இருந்து RECORD செய்து பாட்டில் இணைத்து இருக்கிறார்கள்.
* " ஏ.ஆர்.ரஹ்மானிடம் அவர் அப்பா நீ பெரிய கிரிக்கெட் வீரராக வர வேண்டும் என்று சொல்லி இருந்தாலும், சச்சினிடம் அவரது அப்பா நீ பெரிய இசையமைப்பாளராக வர வேண்டும் என்று சொல்லி இருந்தாலும் என்ன நடந்து இருக்கும் சொல்லு " என்பது போன்ற நிறைய 'சுளீர்' வசனங்கள் இருக்கிறது 'நண்பன்' படத்தில்.
Subscribe to:
Posts (Atom)












