Saturday, February 11, 2012

ஆசை நண்பனால் நிறைவேறியது ! : விஜய்

 
 
ஷங்கர் இயக்கத்தில் விஜய், சத்யராஜ், ஜீவா, ஸ்ரீகாந்த், சத்யன், இலியானா மற்றும் பலர் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் நண்பன். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க, ஜெமினி பிலிம் சர்க்கியூட் தயாரித்து இருக்கிறது.

தனது மாஸ் ஹீரோ இமேஜ் விட்டு விஜய் நடித்து இருக்கும் படம் இது. 'நண்பன்' மக்களிடையே வரவேற்பை பெற்று இருப்பது விஜய்யை சந்தோஷத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

'நண்பன்' படக்குழுவினருக்கு தனது வீட்டில் விருந்தளித்த விஜய் நேற்று பத்திரிகையாளர்களிடம் தனது
சந்தோஷத்தை பகிர்ந்து கொண்டார்.

பத்திரிகையாளர் சந்திப்பில் விஜய் பேசும்போது " நண்பன் படத்தின் வசூல் நன்றாக இருப்பதாக தகவல் வந்திருக்கிறது. வசூலில் என் முந்தைய படங்கள் சாதனையை முறியடித்துள்ளதாகவும் கூறுகிறார்கள்.

எனக்கு வித்தியாசமான பாத்திரங்களில் நடிக்க ஆர்வம் இருந்தது. இந்தியில் '3 இடியட்ஸ்' பார்த்த போது எனக்கு மிகவும் பிடித்து விட்டது. அதனால் அதன் அப்பட ரீமேக்கில் நடித்தேன். இது மாதிரி பாத்திரங்களில் நடிக்க கதை, இயக்குனர், தயாரிப்பாளர் என அனைத்தும் நல்லபடியாக அமைய வேண்டும். 'நண்பன்' படத்தில் அது அமைந்தது.

இதில் ஆக்ஷன், பஞ்ச் வசனங்கள் என எதுவும் கிடையாது. பத்து பேருடன் சண்டை போடுவது ஒரு ஹீரோயிசம் என்றால் 'நண்பன்' படத்தில் எனது பாத்திரம் வேறு விதமான ஹீரோயிசம்.

என்னை திரையில் வித்தியாசமாக பார்க்க ஆசைப்பட்டேன். அது 'நண்பன்' படத்தின் மூலம் நிறைவேறி இருப்பதில் மகிழ்ச்சி. 'நண்பன்' படத்தில் கதைக்கு தேவைப்பட்டதால் மட்டுமே இலியானாவுடன் முத்த காட்சியில் நடித்தேன். ஸ்ரீகாந்த், ஜீவா பேன்ட் கழற்றும் சீன்கள் தவறாக தெரியவில்லை. கல்லூரி ராகிங்குகளில் நடப்பவை தான். 'நண்பன்' படத்தின் மூலம் ஸ்ரீகாந்த், ஜீவா இருவருமே எனக்கு நெருங்கிய நண்பர்களாகி விட்டனர்.

தற்கால கல்வி முறையின் தவறுகள் நண்பன் படத்தில் சுட்டிக் காட்டப்பட்டு உள்ளது. மாணவர்களுக்கு எந்த துறையில் ஆர்வம் இருக்கிறதோ அதைப் படிக்க அனுப்ப வேண்டும். எனது அப்பா என்னை டாக்டராக்க ஆசைப்பட்டார். எனக்கு நடிப்பில் ஆர்வம் இருந்ததால் சினிமாவுக்கு வந்து விட்டேன்.

எனது மகனுக்கு கிரிக்கெட்டில் ஆர்வம் இருக்கிறது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் 'துப்பாக்கி' படத்தில் நடித்து வருகிறேன். 'துப்பாக்கி' படத்தில் எனது ரசிகர்கள் அடுத்து ஒரு வித்தியாசமான விஜய்யை பார்ப்பார்கள்.

' நண்பன்' படத்துக்கு கேளிக்கை வரி விலக்கு அளித்த முதலமைச்சருக்கு படக்குழுவினர் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். " என்று கூறினார்.

'துப்பாக்கி'யில் விஜய்யின் நண்பனாக நடிக்கிறார் சத்யன் !

 
 
விஜய் - சத்யன் இருவரும் இணைந்து நடித்து சமீபத்தில் வெளியான படம் 'நண்பன்'. சத்யன் நடிப்பு இப்படத்தில் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் விஜய் - சத்யமன் இருவரும் மீண்டும் 'துப்பாக்கி' படத்தில் இணைந்து நடித்து வருகிறார்கள்.

'நண்பன்' படப்பிடிப்பில் இவரது நடிப்பை பார்த்தவர்கள் 'துப்பாக்கி' படத்திற்கு இவரை
முருகதாஸிடன் சிபாரிசு செய்ய, முருகதாஸ் உடனே அவரை 'துப்பாக்கி' படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்தாராம்.

'நண்பன்' படத்தில் இவரது நடிப்பை ரசித்த ஏ.ஆர்.முருகதாஸ், சத்யனை பாராட்டியதோடு தன் படத்தில் அவரது கதாபாத்திரத்தை அதிகப்படுத்தியிருக்கிறாராம். இப்படத்தில் விஜய்யின் நண்பனாக நடிக்கிறார் சத்யன்.

'நண்பன்' படத்தினைப் போலவே 'துப்பாக்கி' படத்திலும் தனது நடிப்பிற்கு வரவேற்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் சத்யன்.

விஜய்க்கும் வில்லன் அஜீத்துக்கும் எதிரி !

 
 
அஜித் நடிப்பில் வெளிவர இருக்கும் 'பில்லா - 2', விஜய் நடிப்பில் வெளிவர இருக்கும் 'துப்பாக்கி' இவ்விரண்டு படங்களிலும் வில்லனாக நடித்து வருகிறார் வித்யூத் ஜாம்வால்.

ஒரே சமயத்தில் தமிழ் திரையுலகின் இரண்டு பெரும் நாயகர்களுடன் நடித்து வருவதால் சந்தோஷத்தில் இருக்கிறார் வித்யூத். இது குறித்து வித்யூத் கூறியிருப்பது :

" ஒரே சமயத்தில் விஜய் மற்றும் அஜீத் இருவருடனும் நடித்து வருவது சந்தோஷமாக
இருக்கிறது.

'பில்லா 2' படத்திற்காக ஜார்ஜியாவில் சண்டைக்காட்சி ஒன்றை படமாக்கினோம். ஆங்கில சினிமாவில் தான் அதுமாதிரியான சண்டைக் காட்சிகளைப் பார்க்க முடியும். இந்திய சினிமாவில் முதன் முறையாக அதுபோல் ஒரு சண்டைக்காட்சியை படமாக்கி இருக்கிறோம். இந்த சண்டைக்காட்சியில் நான் நடித்ததில் பெருமைப்படுகிறேன்.

அஜீத் மிகவும் எளிமையான மனிதர். பல விஷயங்கள் குறித்தும் தெளிவான பார்வை உடையவர். விஜய்யுடன் நடிக்கும்போது மிகவும் சந்தோஷமாக இருந்தது. இவ்வளவு ரசிகர்கள் இருந்தும் இன்னும் தன் தொழிலில் மிகச் சிரத்தையுடன் இருக்கிறார். "

சூர்யாவுடன் இணைந்து நடிக்க தயார் - விஜய்

 

சமீபத்தில் விஜய் நடித்து வெளிவந்த படமான நண்பன் வெற்றியடைந்துள்ளது. நண்பன் படம் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான தியேட்டர்களில் திரையிடப்பட்டது. நண்பன் படத்திற்கு அடுத்து முருகதாஸ் இயக்கத்தில் துப்பாக்கி என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் விஜய், அவ்வப்போது நண்பன் பட ம் ஓடிக்கொண்டிருக்கும் தியேட்டர்களுக்குச் சென்று ரசிகர்களுடன் பேசுகிறார்.
மதுரையில் உள்ள ஒரு தியேட்டருக்கு சென்ற விஜய் அங்கு ரசிகர்களிடம் பேசிவிட்டு மதுரை களவாசலில் உள்ள ஓட்டல் ஒன்றில் மனவளர்ச்சி குன்றிய மாணவ-மாணவிகளுடன் பேசினார். அதன் பின் ஆதரவற்ற பெண்கள் இருவருக்கு வாழ்வில் முன்னேற நிதி உதவியும் அளித்தார்.

அதன் பின் நிரூபர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது விஜய் " அரசியல் பற்றிய கேள்விகள் இங்கு வேண்டாம்.சினிமா பற்றி மட்டும் இப்போது பேசுவோம். நண்பன் படம் போலவே இன்னொரு கதை அமைந்தால் கண்டிப்பாக இரண்டு ஹீரோக்களுடன் சேர்ந்து நடிப்பேன்.

ஒரு படம் ஓடுவதும் ஓடாததும் கதை மற்றும் திரைக்கதையின் கையில் தான் உள்ளது. அந்த கதைகளுக்கு நாங்களும் ரசிகர்களாகவே இருக்கிறோம். ஒரு ரசிகனாக அதை உங்களிடம் சேர்க்கிறோம்.

சூர்யாவுடன் நான் இணைந்து நடித்த படத்தின் கதையைப் போல் அமைந்தால் கண்டிப்பாக சூர்யாவுடன் மீண்டும் இணைந்து நடிப்பேன். இப்போது துப்பாக்கி என்ற படத்தில் நடித்து வருகிறேன்.

சிறிய பட்ஜட் படங்கள் புதுமுகங்களுடன் வெற்றி பெற்று வருவது மகிழ்ச்சியடைய வேண்டிய விஷயம். அவர்களை உற்சாகப்படுத்த வேண்டும். ஏனென்றால் நானும் ஒரு காலத்தில் புதுமுகமாக அறிமுகமானவன் தான்." என்று கூறினார்.

Vijay in Nanban Special screening at Madurai

 
 

Between the busy schedule of Murugadoss's Thuppakki, Vijay was present at a special screening of Nanban held at Thanga Regal theatre in Madurai much to the joy of his fans. He distributed gifts and a feast was prepared for a group of mentally challenged people and served. Vijay also addressed his fans and shared his Nanban experiences.

Sathyaraj, Shankar, Srikanth, Jiiva and Sathyan are all wonderful people and it was great to work with them, Vijay said. He said that it was a dream come true for him to work with Sathyaraj. The actor also dropped in at Apsara theatre in Virudhunagar. Because of the strike, shooting has been stalled and Vijay is using the time off to connect with his dear fans.

Vijay in Nanban Special screening at Madurai

Vijay in Nanban Special screening at Madurai

Vijay in Nanban Special screening at Madurai

Nanban movie unseen stills

 
 


 

‘ரசிகர்கள் எல்லோரையும் என் நண்பர்களாகத் தான் பார்க்கிறேன்”

 

விஜய் தற்போது நடித்து வரும் 'துப்பாக்கி" படத்தின் படப்பிடிப்பு இடைநிறுத்தப் பட்டுள்ளதால் தமிழ்நாட்டில் உள்ள முக்கிய திரையரங்குகளுக்கு சென்று நண்பன் படத்தினை விளம்பரப்படுத்தி வருகிறாராம் விஜய்.

இதன் ஓர் அங்கமாகவே 'நண்பன்" படத்தினை விளம்பரப்படுத்துவதற்காக மதுரைக்கு சென்ற விஜய் அங்கு நண்பன் படம் திரையிடப்பட்டுள்ள திரையரங்கொன்றில் இரசிகர்களைச் சந்தித்துள்ளாராம்.

சந்தித்தது மாத்திரமா அவர்களுடன் இரண்டொரு வார்த்தைகளையும் பேசியுள்ளாராம்!

'என்னுடைய ரசிகர்கள் எல்லோரையும் என் நண்பர்களாகத் தான் பார்க்கிறேன். இந்தப் படத்தை வெற்றி பெறச் செய்த என் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. ஒரு மனிதனுக்கு எதிர்பாராதவிதமாக பெற்றோர் கூட இல்லாமல் இருக்கலாம். ஆனால் 'நண்பன்" இல்லாமல் இருக்க முடியாது.

ஒவ்வொருவரும் தங்கள் வாழ்வில் வெற்றி பெற அவர்களுக்குப் பிடித்த துறையை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.

எனது ரசிகர்களுக்கும் நான் அதைத்தான் கூறுவேன். வாழ்க்கையில் முன்னேற்றம் பெற வேண்டும் என்றால் உங்களுக்கு விருப்பமான துறையைத் தெரிவு செய்தால் அதில் நிச்சயமாக வெற்றி பெறுவீர்கள்".

Vijay meets his fans

 

Vijay was present at a special screening of Nanban held at Thanga Regal theatre in Madurai much to the joy of his fans. He distributed gifts and a feast was prepared for a group of mentally challenged people and served. Vijay also addressed his fans and shared his Nanban experiences.

Sathyaraj, Shankar, Srikanth, Jiiva and Sathyan are all wonderful people and it was great to work with them, Vijay said. He said that it was a dream come true for him to work with Sathyaraj. The actor also dropped in at Apsara theatre in Virudhunagar. Because of the strike, shooting has been stalled and Vijay is using the time off to connect with his dear fans.

Vijay Visits Madurai theatre stills

 


Vijay, who is basking in the success of his recent release 'Nanban' took time to make a trip to Madurai to participate in an event arranged by a local NGO.

The actor had a feast with mentally challenged children. The actor also watched his film 'Nanban' at Thanga Regal cinema hall in the city along with his fans. The ardent fans were delighted to have their favourite star near them and celebrated their moment watching Vijay's movie sitting along with the star.

Vijay also visited Virudhunagar town to meet his fans who were watching 'Nanban' in Apsara theatre. The fans were surprised to see their star there.

The actor shared his 'Nanban' experiences with his fans. "It was a dream come true for me as I acted with my favourite actor Sathyaraj. Director Shankar and all my co-stars, Sathyaraj, Jiiva, Srikanth and Sathyan were great. I enjoyed every moment with them while shooting the film," said the actor.

Vijay-Visits-Madurai-Theatre-Stills-1 Vijay-Visits-Madurai-Theatre-Stills-2 Vijay-Visits-Madurai-Theatre-Stills-3 Vijay-Visits-Madurai-Theatre-Stills-4 Vijay-Visits-Madurai-Theatre-Stills


Popular Posts

Popular Posts