Monday, February 20, 2012

விஜய் கொடுத்த சரக்கு பார்ட்டி!

 
 
 
சினிமா நட்சத்திரங்களுக்கான கிரிக்கெட் போட்டி கடந்த ஜனவரி 13-ஆம் தேதி துவங்கி பிப்ரவரி 12-ஆம் தேதி வரை நடைபெற்றது.சினிமா நட்சத்திரங்கள் தங்களது மொழி வாரியாக பிரிக்கப்பட்டு அவரவர் அணிக்காக விளையாடினர்.
 

இந்த தொடரில் விஷால் தலைமையில் களம் இறங்கிய தமிழ் நடிகர்களின் சென்னை ரைனோஸ் அணி சிறப்பாக விளையாடி கோப்பையை கைபற்றியது. சென்னையில் தெலுகு வாரியர்ஸ் அணியை எதிர்த்து சென்னை ரைனோஸ் விளையாடிய செமி பைனல் மேட்சை நடிகர் விஜய் கலந்து கொண்டு உற்சாகத்துடன் பார்த்து ரசித்தார்.
 
சென்னை அணி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து நடிகர் விஜய் சென்னையிலுள்ள நட்சத்திர ஹோட்டலில் சென்னை ரைனோஸ் அணியில் இடம்பெற்றிருந்த ஆட்டநாயகர்களுக்கு பார்ட்டி வைத்துள்ளார்.
 
இந்த பார்ட்டியில் சில நடிகைகளும் கலந்து கொண்டுள்ளார்கள்.



சென்னை ரைனோஸ் அணி ஆட்டநாயகர்களுக்கு விஜய் கொடுத்த சரக்கு பார்ட்டி!

 
சினிமா நட்சத்திரங்களுக்கான கிரிக்கெட் போட்டி கடந்த ஜனவரி 13-ஆம் தேதி துவங்கி பிப்ரவரி 12-ஆம் தேதி வரை நடைபெற்றது.சினிமா நட்சத்திரங்கள் தங்களது மொழி வாரியாக பிரிக்கப்பட்டு அவரவர் அணிக்காக விளையாடினர்.
இந்த தொடரில் விஷால் தலைமையில் களம் இறங்கிய தமிழ் நடிகர்களின் சென்னை ரைனோஸ் அணி சிறப்பாக விளையாடி கோப்பையை கைபற்றியது. சென்னையில் தெலுகு வாரியர்ஸ் அணியை எதிர்த்து சென்னை ரைனோஸ் விளையாடிய செமி பைனல் மேட்சை நடிகர் விஜய் கலந்து கொண்டு உற்சாகத்துடன் பார்த்து ரசித்தார்.
சென்னை அணி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து நடிகர் விஜய் சென்னையிலுள்ள நட்சத்திர ஹோட்டலில் சென்னை ரைனோஸ் அணியில் இடம்பெற்றிருந்த ஆட்டநாயகர்களுக்கு பார்ட்டி வைத்துள்ளார்.
இந்த பார்ட்டியில் சில நடிகைகளும் கலந்து கொண்டுள்ளார்கள்.

நண்பன் – இனி ALL IS WELL


3idiots படத்தின் ரீமேக்கில் விஜய் நடிக்கிறார் என்று தெரிந்ததுமே ரசிகர்கள் 3idiots படத்தை பார்த்துவிட்டனர். விஜய் எப்படி நடித்துள்ளார் என்று பார்ப்பதற்காக தியேட்டருக்குச் சென்ற ரசிகர்கள் விஜய்யின் நடிப்பில் மகிழ்ச்சியடைந்திருக்கிறார்கள் என்றே சொல்லலாம்.

கடைசியாக வந்த சில படங்களில் விஜய் ஒரே மாதிரியாக நடித்திருந்ததால், இந்த மாறுபட்ட நடிப்பு ரசிகர்களுக்கு புத்துணர்ச்சி அளித்துள்ளது. இயக்குனர் ஷங்கர் ரசிகர்களை இருக்கையில் கட்டிப் போட்டுவிட்டார். ஏற்கனவே பார்த்த படத்தை பார்க்க வரும் ரசிகர்களை உச்சு கொட்ட வைக்காமல் இருக்க வைக்க வேண்டும் என்ற முயற்சியில் வெற்றி பெற்றார் இயக்குனர்.
ஸ்ரீகாந்த் மற்றும் ஜீவா நண்பர்கள். இவர்களின் மற்றொரு நண்பனான சத்யன் போன் செய்து ஜீவா, ஸ்ரீகாந்தின் மிக முக்கிய நண்பனான விஜய் வந்திருப்பதாக அழைக்கும் போது அவசரமாக தங்களது பழைய கல்லூரிக்கு வருகிறார்கள். ஆனால் விஜய் அங்கு இல்லை, விஜய்யின் இருப்பிடம் தெரியுமென்று சத்யன் கூறுவதால் அங்கு செல்கிறார்கள்.
பின்னோக்கி பிளாஷ்பேக் செல்கிறார்கள். சென்னையின் பிரபலமான பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்க வருகிறார்கள் விஜய் மற்றும் அவரது நண்பர்கள் அனைவரும்.
கல்லூரியின் முதல்வராக சத்யராஜ்.அவர் சித்தாந்தம் பேசுவதால் விஜய் அவரை வெறுக்கிறார். ஸ்ரீகாந்த் மற்றும் ஜீவா படிப்பில் சுமார் மாணவர்கள். விஜய் கல்லூரியிலயே முதலாக வரும் மாணவன். சத்யன் குறுக்குவழியில் முதலிடத்தை கைப்பற்ற நினைப்பவர்.
சத்யராஜூக்கும் விஜய்க்கும் ஏற்படும் கருத்து மோதலால் சத்யராஜூக்கு விஜய்யை பிடிக்கவில்லை. சத்யராஜின் மகள் இலியானாவுடன் முதலில் மோதலில் ஈடுபடும் விஜய் பிறகு காதலிக்கிறார். ஸ்ரீகாந்த் விலங்குகளை புகைப்படமெடுப்பதில் ஆர்வமிருக்க பெற்றோரின் கட்டாயத்தினால் இஞ்சினியரிங் படிக்க வந்திருப்பதை அறிகிறார் விஜய்.
ஜீவாவுக்கும் படிப்பில் ஆர்வமில்லாததை அறிந்து, ஜீவா தன் லட்சியத்தை அடைய விஜய் உதவுகிறார். கெட்டவர்கள் திருந்துகிறார்கள். நல்லவர்கள் நல்ல நிலையை அடைகிறார்கள்.எல்லோரும் செட்டிலாகி விடுவதால் காலேஜ் முடிந்ததும் விஜய் ஆள் அட்ரஸில்லாமல் செல்கிறார். பிளாஷ்பேக் முடிகிறது. சத்யனின் மூலம் ஸ்ரீகாந்தும் ஜீவாவும் விஜய்யின் இருப்பிடத்திற்கு செல்கின்றனர்.
கதையின் திருப்புனையாக அந்த இடத்தில் விஜய்க்கு பதில் இருப்பவர் S.J.சூர்யா. முதலில் அதிர்ச்சியடைந்த நண்பர்கள், பிறகு அவரை மிரட்டி விஜய்யை பற்றிய உண்மையான தகவல்களை அறிந்து அங்கு செல்ல ஆயத்தமாகிறர்கள். ஹீரோயின் இல்லாமல் எப்படி ஹீரோவை பார்ப்பது என்று யோசித்து, இலியானாவை பார்க்கச் செல்கின்றனர்.
இத்தனை நாட்கள் இல்லாமல் திடீரென்று இலியானா திருமண மேடையில் இருக்கிறார். பெண் வீட்டாரிடம் உண்மைகளை சொல்லி அவரையும் அழைத்துக் கொண்டு விஜய்யின் இருப்பிடம் செல்கின்றனர்.அங்கே விஜய்யை பார்த்த பின் தான் விஜய் இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானிகளில் ஒருவர் என்று அனைவருக்கும் தெரியவருகிறது.
நண்பர்கள் ஒன்று சேர்ந்துவிட்டனர். ஹீரோ, ஹீரோயின் ஜோடி போட்டாச்சு. அவ்வளவு தான் படம் முடிந்தது. ஷங்கருக்கு கிடைத்த வெற்றியாக கருதப்படுவது இது ரீமேக் படம் என்ற எண்ணத்தை ரசிகர்களுக்கு படம் பார்க்கும் போது வரவிடாமல் படத்தை கொண்டு சென்றது தான்.
வெளிப்படையாக சொல்லப் போனால் இதுவரை விஜய் நடித்த படங்களில் மெச்சக்கூடியது இதுதான். பூக்கள் தூவி தாரைத் தப்பட்டைகள் முழங்க விஜய்யை வரவேற்கும் வேலைகள் எல்லாம் விஜய்யின் ஓப்பனிங் காட்சியில் இல்லை. விஜய் அடக்கி வாசித்திருக்கிறார் என்றே சொல்லலாம். விஜய் வரும் சீன்கள் எல்லாமே அமைதியான, தன்புகழ் பாடாத, பன்ச் டயலாக் பேசாத நடிப்பில் அருமையாக கவர்கிறார்.
நிச்சயமாக வழக்கமான விஜய் படங்களில் அவரது நடிப்பில் கூடுதலாக இருக்கும் ஏதோ ஒன்று இந்தப் படத்தில் இல்லை. அதுவே அவரை அழகாகக் காட்டுகிறது. பழைய படங்களில் உள்ள படாபடா பில்ட் அப்புகள் போல் இல்லாமல் படத்தில் கதையை ஒட்டிய பிலட் அப்புடன் வலம் வருகிறார்.
ஜீவா என்னதான் சாதுவாக நடித்திருந்தாலும் குடித்துவிட்டு பேசும் காட்சிகளில் கைதட்டல் பெருகிறார். ஜீவாவின் தற்கொலை காட்சி மன நெகிழ்ச்சி.
ஸ்ரீகாந்தின் மார்க்கெட்டுக்கு ஏணிப்படியாக இருக்கப் போகும் படம் இது. முந்தைய படங்களில் சில காட்சிகளில் மட்டுமே வந்து காணாமல் போகும் சத்யன் படம் முழுக்க வருகிறார். சத்யனின் செயல்களுக்கு பதில் சொல்லும் விதமாகவே மூன்று நண்பர்களின் செயல்களும் இருப்பதால் படத்தின் கதை அவருடனே நகர்கிறது.
ஏற்கனவே கேட்ட பாடல்கள் என்பதால் பாடல் காட்சிகளில் கண்களை திரையில் விட்டுவிட்டு செவியும் வாயும் பக்கத்தில் இருக்கும் நண்பர்களுக்கு கம்பெனி கொடுக்கிறது.
செக்ஸி சைரன் இலியானா சாதாரணமான நடிப்பு. விஜய்யின் காதல் காட்சிகளுக்கு கம்பெனி.
வைரஸ் என்ற பட்டப்பெயருடன் வரும் சத்யராஜ் எல்லாவற்றையும் ஸ் ஸ் என்று பேசுவது ட்ரெண்டாக மாறலாம். விளையாட்டாக வேலையாளிடம் ஸ்ரீகாந்துக்கும் ஜீவாவுக்கும் வேலை கிடைத்தால் என் மீசையை எடுத்து விடு என்று விளையாட்டுக்கு சொல்ல அவர்களுக்கு வேலை கிடைத்ததும் அவர் மீசையை எடுத்து விட இவர் குதிப்பது உண்மையிலேயே சிரிக்க வேண்டிய காமெடி.
நண்பன் – தன் புகழ் படாத விஜய்! இனி ALL IS WELL என்றே நம்புவோம்

விருது பெற்ற மகிழ்ச்சியில் இளையதளபதி விஜய்


எடிசன் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆகிய இரண்டு விருதுகளை வாங்கிய மகிழ்ச்சியில் இளையதளபதி விஜய் உள்ளார்.
சமீபத்தில் விஜய், சிறந்த நடிகருக்கான எடிஷன் விருது மற்றும் வேலாயுதம் படத்தில் சிறப்பாக நடித்ததற்கு "சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்" விருது என இரண்டு விருதுகளை பெற்றார்.
இதுகுறித்து இளையதளபதி விஜய் கூறியிருப்பதாவது, இந்த வருடத்தின் தொடக்கம் எனக்கு மகிழ்ச்சிகரமாக அமைந்துள்ளது.
தொடர்ந்து வெற்றி வாய்ப்பை ஏற்படுத்தித் தரக்கூடிய நல்ல படங்களில் நான் நடிப்பேன் என்று நம்பிக்கை வைத்துள்ளேன்.
தற்போது எனது நடிப்பில், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் துப்பாக்கி திரைப்படத்தில் நடிக்கிறேன்.
இது ஆக்ஸன் தீப்பொறி பறக்கும் படம் என்பதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பை இப்படம் நிச்சயம் நிறைவேற்றும் என்று இளைய தளபதி விஜய் தெரிவித்துள்ளார்.

துப்பாக்கி படப்பிடிப்பு விரைவில் தொடங்கும்: விஜய்

 

துப்பாக்கி திரைப்படம் கை விடப்படவில்லை என்று நாயகன் விஜய் கூறியுள்ளார்.
கொலிவுட்டில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், கலைப்புலி தாணு தயாரிக்கும் துப்பாக்கியில் இளையதளபதி விஜய் நடிக்கிறார்.
துப்பாக்கி படப்பிடிப்பு மும்பையில் நடந்துவந்த நிலையில், தயாரிப்பாளர்-பெப்ஸி பிரச்சினை காரணமாக படப்பிடிப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் ஏ.ஆர்.முருகதாசும் குறும்படம் ஒன்றை தயாரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்.
இதனால் துப்பாக்கி கைவிடப்பட்டதாக பல்வேறு செய்திகள் வெளியாகி வருகின்றன. இது விஜய்யின் ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து விஜய் மற்றும் அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரனிடம் விசாரித்து வருகிறார்கள்.
சமீபத்தில் ஒரு நிகழ்ச்சிக்கு வந்த விஜய்யிடம் ரசிகர்கள் கேட்டதற்கு, துப்பாக்கி நிறுத்தப்பட்டு விட்டது என்று வெளிவரும் தகவல்களை நம்பவேண்டாம் என்று கூறியுள்ளார்.
தயாரிப்பாளர்-பெப்சி பிரச்சினை போன்றவையெல்லாம் தீர்ந்ததும் படப்பிடிப்பு தொடங்கிவிடும் என்று கூறினார்.

Popular Posts

Popular Posts