Monday, January 16, 2012

நண்பன் படத்திற்கு தடை ?!

"நண்பன் படத்தில் , இந்திய ஜனநாயகக் கட்சி நிறுவனரின் புகழை
களங்கப்படுத்தி , அவதூறான வார்த்தைகளை பயன்படுத்தியுள்ள , இயக்குனர்
ஷங்கர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் ; படத்தை தடை செய்ய வேண்டும்
எனக்கோரி , அக்கட்சியின் பொதுச் செயலர் ஜெயசீலன் , காவல் துறை கமிஷனரிடம்
புகார் மனு அளித்துள்ளார்.மனுவில் கூறியிருப்பதாவது:ஷங்கர் இயக்கிய , "
நண்பன் படத்தில் , மோசடி கதாபாத்திரத்திற்கு , " பாரிவேந்தர் என்று பெயர்
சூட்டியிருக்கிறார்.
இன்னொரு பெண் கதாபாத்திரம் மதுபோதையில் , " பாரிவேந்தராவது ,
பூரிவேந்தராவது என்றும் ; மற்றும் ஒரு இடத்தில் , " பாரி , பூரி ,
கக்கூஸ் லாரி என்றும் , வசனத்தை பயன்படுத்தி இருக்கிறார். இதன் மூலம் ,
பல லட்சம் மக்களால் பாரிவேந்தர் என்று அழைக்கப்படுகிற எங்கள் கட்சியின்
நிறுவனர் புகழுக்கு களங்கம் ஏற்பட்டிருக்கிறது.இதற்கு முன்பாக , அவர்
இயக்கிய , " சிவாஜிபடத்தில் , தமிழினத்தின் அடையாளமான வள்ளல் பாரியின்
மகள்களான அங்கவை , சங்கவை ஆகிய இருவரையும் , கறுப்பாக சித்தரித்து ,
தமிழ்ப் பெண்கள் கறுப்பானவர்கள் என்றும் , யாரும் அவர்களை உரிமையாக்கிக்
கொள் ளலாம் என்றும் சித்தரித்திருக்கிறார்.
வேறு ஒரு படத்திலும் , பல லட்சம் கட்சி மற்றும் பார்க்கவ குல
சமுதாயத்தால் போற்றப்படுகிற எங்களுடைய தலைவரின் பெயரை , குடிகாரனுக்கு
சூட்டி , அவன் , பெண்களிடம் தகாத முறையில் நடப்பது போல காட்சி அமைத்து ,
அவர் பெயரை களங்கப்படுத்தி இருக்கிறார்.இவ்வாறு , எங்கள் நிறுவனத் தலைவர்
புகழை கெடுக்கும் விதமாக இயக்குனர் ஷங்கர் , அவதூறான , தரக்குறைவான ,
சட்டத்திற்கு புறம்பானவைகளை , தவறான உள்நோக்குடன் பயன்படுத்தி , தன்
படத்திற்கு விளம்பரம் தேடிக் கொள்கிறார்.எங்கள் நிறுவனர் , அவரை
பின்பற்றுகிற கட்சி மற்றும் சமுதாய மக்களின் மனதை புண்படுத்தி களங்கம்
கற்பித்த ," நண்பன் பட இயக்குனர் சங்கர் மற்றும் தயாரிப்பாளர் மீது
வழக்குப் பதிந்து , சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு ,
மனுவில் கூறப்பட்டுள்ளது.

Popular Posts

Popular Posts