Tuesday, January 31, 2012

மீண்டும் புதுப்பொலிவுடன் நண்பன்

 
 
 
பொங்கல் பண்டிகைக்கு வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த படம் நண்பன். தயாரிப்பாளர் சங்கத்துக்கு இப்படத்தில் உள்ள சில வசனங்களை மாற்றும்படி அதிகளவான கடிதங்கள் சென்றதால் எஸ்.எ.சந்திரசேகர் படத்தின் இயக்குனர் சங்கரை அழைத்து மாற்றங்களை செய்யும் படி கூறியுள்ளார். உடனே இப்படத்தில் உள்ள ஆண்டி பண்டாரம் ஆகிய சொற்கள் வெட்டப்பட்டுள்ளன.
ஆண்டி பண்டாரம் ஆகிய சொற்கள் சமூகத்தில் உள்ளவர்களை இழிவுபடுத்தும் வகையில் உள்ளதாலே இவ்வாறு மாற்றப்பட்டுள்ளது எனக்கூறப்படுகிறது. பாரி , பூரி ககூசே சாரி ஆகிய வசனங்களும் சென்சார் செய்யப்பட்டுள்ளன.
இப்பம் தரமான மற்றும் மாபெரும் வெற்றி பெற்றதால் அதிகளாவான விருதுகளை எடுக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
 

நண்பன் சிறப்பு பார்வை

 
 
தினமலர் - விமர்சனம்
த்ரி இடியட்ஸ் எனும் பெயரில் இந்தியில் வெளிவந்து வெற்றி பெற்ற இந்தி திரைப்படம் தமிழில் ஷங்கர் இயக்கத்தில் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் நடிக்க நண்பன் ஆகியிருக்கிறது!

பெற்றவர்களின் ஆசையை பிள்ளைகள் மீது திணிக்காமல் படிப்பு விஷயத்தில் பிள்ளைகளின் விருப்பப்படி விட்டால், அவர்கள் விரும்பிய துறையில் அவரவர் முன்னுக்கு வரமுடியும் எனும் கருத்தை கதையாக்கி, அதை எத்தனைக்கு எத்தனை காமெடியாகவும் கமர்ஷியலாகவும் சொல்ல முடியுமோ அத்தனைக்கு அத்தனை அமர்க்களமாக சொல்லியிருக்கிறார் இயக்குநர் ஷங்கர்.

விஜய், பஞ்சவன்பாரி வேந்தனாக பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கிறார். இவராகத்தான் இருக்கமுடியும் "கொசக்சி பச புகழாகவும் என்பதை ஸ்ரீவத்சன் எனும் சைலன்சர் சத்யன் அடிக்கடி சொல்வதிலிருந்து ஆரம்பத்திலேயே யூகிக்க முடிவது விஜய்யின் பாத்திரத்தை என்னவோ விஜய் எதிர்பார்த்ததற்கும் மேலாகவே நடித்து அதை சரிசெய்திருக்கிறார். பஞ்சவன் பாரிவேந்தன் கொசக்சி பசபுகழ் என எண்ணற்ற முகங்கள் விஜய்க்கு இப்படத்தில் இருந்தாலும் இலியானாவுடன் காதல் வயப்பட்டு டூயட் பாடும் விஜய்யின் இயல்பான முகமே இளமையாகவும் இனிமையாகவும் இருக்கிறது. விஜய் பாத்திரத்தை பொறுத்தவரை ஆயிரம் நிறை, குறைகள் சொன்னாலும் ஒரு பெரிய ஆக்ஷன் ஹீரோ அந்தப் பக்கமே எட்டிப்பார்க்காமல் இந்தப் படத்தில் முழுக்க முழுக்க காமெடியிலேயே கலக்கி இருப்பது வரவேற்கத்தக்கது!

சேவற்கொடி செந்தில் - ஜீவாவுக்கும், வெங்கட் ராமகிருஷ்ணன் எனும் ஸ்ரீகாந்த்துக்கும் ஆல் இஸ் வெல் என நெஞ்சில் கைவைத்துக் கொண்டு கவலைகளை மறந்திருக்க சொல்லும் விஜய்யின் சொல்-செயல்தான் வேதவாக்கு என்றாலும் ஆங்காங்கே அதிலும் நடிப்பிலும் மிளிர்ந்து நிற்கிறார் ஜீவா. பலே...பலே!

கதாநாயதி இலியானா ரியா எனும் பாத்திரத்தில் இயல்பாக நடித்திருக்கிறார். பாடல் காட்சிகளில் மட்டுமே அவருக்கு பில்-டப்புகள் பிரமாதப்படுத்தப்பட்டிருக்கின்றன. அதிலும் இருக்காண்ணா, இல்லியண்ணா இடுப்பானா இலியானா... பாடலில் இலியானா பிரமாதம்ண்ணா! அதேமாதிரி இக்கட்டான சூழ்நிலையில் அக்கா அனுயாவிற்கு பிரசவம் பார்க்கும் இன்ஜினியர் விஜய்க்கு இளம் டாக்டரான இலியானா வெப்காமிரா வீடியோவில் பிரசவ மருத்துவ குறிப்புகள் கொடுக்கும் இடங்களில் பிரமாதமாக நடித்தும் இருக்கிறார். பேஷ், பேஷ் கீப் இட் அப்!

இலியானாவின் அப்பாவாகவும் பொறியியல் கல்லூரியின் பிரின்ஸ்பாலாகவும் வில்லனாகவும் விருமாண்டி சந்தனம் கேரக்டரில் வரும் மூத்த நடிகரின் கெட்-அப்பும் செட்-அப்பும் ஹாலிவுட், பாலிவுட் படங்களுக்கு வேண்டுமானால் ஓகே. நண்பன் மாதிரி ஒரு தமிழ்படத்திற்கு பெரிய பலவீனமாகும் அவரும் அவரது பாத்திரமும் என்றால் மிகையல்ல!
ஸ்ரீவத்சன் எனும் சைலன்சராக சத்யன் கிறுக்குதனமாக செய்யும் காரியங்கள் சில இடங்களில் கடிக்கவும் பல இடங்களில் சிரிக்கவும் செய்கிறது. ஒரிஜினல் பஞ்சவன்பாரிவேந்தன் எஸ்.ஜே.சூர்யா, பன்னீர்செல்வமாக-வசந்த் விஜய், ரியாவின் மாப்பிள்ளை ராகேஷாக வரும் டி.எம். கார்த்திக், கல்வி அமைச்சர் ஷண்முகசுந்தரம், விஜய்யின் வளர்ப்பு தந்தை அஜய் ரத்னம், விஜய்யின் தந்தை ராமு, மில்லிமீட்டர் ரின்சன், ஜீவாவின் தந்தை கும்பகோணம் அம்பி, ரியாவின் அக்கா ஸ்வேதாவாக வரும் அனுயா, ஸ்ரீயின் அம்மா உமா பத்மநாபன், ஜீவாவின் அம்மா நிர்மலாவாகவரும் சந்திரா உள்ளிட்டவர்களும் பாத்திரமறிந்து பளிச்சிட்டு நண்பனுக்கு நயம் சேர்த்திருக்கின்றனர் என்றால் மிகையல்ல!

நம் காதோரம் இன்னமும் இழையோடும் ஹாரிஸ் ஜெயராஜின் இனிய இசையும், மனோஜ் பரமஹம்சாவின் காண்போர் கண்ணுக்குள்ளேயே எப்போதும் நிற்கும்படியான ஒளிப்பதிவும் நண்பனின் பெரும்பலம்!

ஆயிரம்மிருந்தும் வசதிகள் இருந்தும் பிரமாண்டத்திற்கு பெயர்போன ஷங்கர், இயற்கை உபாதைகள் வருவது, போவதையெல்லாம் பிரமாண்டபடுத்தியிருப்பது சைலன்ஸ் காமெடி என்றாலோ, இப்படத்தில் வரும் சைலன்ஸரி (சத்யன்)ன் காமெடி மட்டுமென்றாலோ ஓகே! ஜீவா, ஸ்ரீகாந்தை எல்லாம் பிரின்ஸிபால் வீட்டு வாசலில் ஒன்பாத்ரூம் போகவிடுவதையும், ஆ, ஊ என்றால் ஜட்டியோடு டான்ஸ் ஆட விடுவதையும் காலில் விழ செய்வதையும் எற்றுக் கொள்ளவே முடியவில்லை. என்னதான் இளைஞர் பட்டாளம் காலேஜ் கேம்பஸ், ராகிங், ரவுசு, ரீமேக்கதை இத்யாதி, இத்யாதி என்றாலும் "உவ்வே என குமட்டல் வருவதை இயக்குநர் ஷங்கர் நினைத்திருந்தால் நிச்சயம் தவிர்த்திருக்கலாம்!

ஆக மொத்தத்தில் எல்லாவற்றையும் ரசிக்க தெரிந்தவர்களுக்கு "நண்பன் - நன்"ஃபன்




-------------------------------------------------------------



குமுதம் சினி விமர்சனம்


விஜய்யின் அடிதடி இல்லை, ஷங்கரின் சூப்பர் ஹீரோ சாகசம் இல்லை. இருவருமே "3 இடியட்ஸை மட்டும் மனதில் வைத்து நண்பனுக்காக கைகோர்த்திருக்கிறார்கள்.

மதிப்பெண்களுக்கும் வயதுக்கே உரிய சேட்டைகளுக்கும் இடையே மாணவர்கள் ரன் எடுக்க ஓடும் இன்ஜினீயரிங் கல்லூரிதான் கதைக்களம். இயந்திர வாழ்க்கை வாழும் மாணவர்களையும் ஆசிரியர்களையும் "ஆல் இஸ் வெல் என்று தட்டிக்கொடுக்க ஒருவன் வருகிறான். அவனால் இரண்டு நண்பர்களுக்கு நிகழும் இயல்பான அற்புதங்கள்தான் கதை.

சைலண்ட்டான சாதனை மாணவன் பாரிவேந்தனாக விஜய் ரசிக்க வைக்கிறார். ஆசிரியர்களிடம் சின்னச் சின்ன புத்திசாலித்தனங்களை வைத்தே விஜய் பண்ணும் கலாட்டாக்கள் வெகு சுவாரஸ்யம். தெனாவெட்டுப் பேராசிரியர் விருமாண்டி வெளுத்து வாங்கியிருக்கிறார். விஜய்யின் வெறித்தனமான நண்பர்களாக ஜீவாவும் ஸ்ரீகாந்தும்! ஈகோ பார்க்காமல் சக ஹீரோ ஒருவருக்கு சலாம் போட்டு நடித்துள்ள இருவருக்கும் அழுத்தமான ஒரு சபாஷ்!

பெல்லி இடுப்பும் பளீர் சிரிப்புமாக வரும் இலியானா கொள்ளை அழகு.

விஜய்யோடு மோதிக்கொண்டே இருக்கும் சத்யனின் ரவுசு வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது. தமிழ் தெரியாத சத்யனின் சொற்பொழிவில் வார்த்தைகளை மாற்றிப்போட்டு விஜய் குழப்புவது தமிழ் ரசிகனுக்கு அறிஞர் அண்ணா காலத்து ஐடியா. ஜீவாவின் கறுப்பு நிற அக்காவை மையமாகக் கொண்ட தமாஷில் "அங்கவை சங்கவை மேட்டர்தான் நினைவுக்கு வருகிறது. தவிர்த்திருக்கலாம்.

வெளிநாட்டில் டூயட், கிராபிக்ஸ் டெக்னிக்குகள் உள்ளிட்ட தனது ஏரியாவை நக்கலடித்துக்கொண்டே பயன்படுத்தவும் செய்திருப்பது இயக்குநர் ஷங்கரின் சாமர்த்தியம்தான்.

"அஸ்க்கு லஸ்க்கா ஈமோ பாடலில் இசையமைப்பாளர் ஹாரீஸ் வசீகரிக்கிறார். மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவு ரம்மியம்.

தூக்கலான பிரச்சாரம், நாடகத்தனம் என்று அங்கங்கே உறுத்தினாலும் "நண்பன் கடைசியில் நெருக்கமான தோழனாகி விடுகிறான்.

நண்பன் - ஆல் இஸ் வெல்!

குமுதம் ரேட்டிங் - ஓகே.



------------------------------------------------------------




கல்கி விமர்சனம்


ஷங்கரின் க்ளிஷே க்ளிசரின் கலக்காத ஷங்கர் படம் - நண்பன். த்ரி இடியட்ஸின் ரீமேக். எனினும் தமிழ்ச் சூழலுக்குப் பொருந்திப் போகிற இயக்கத்தில், நிதானம் தவறாத ட்ராவிட் பேட்டிங்கின் ஆர்ப்பாட்டமில்லா அழகு. கல்வியின் பயனே திறமையை ஒளிரச் செய்வதுதான்; மங்கச் செய்வதல்ல என்ற உயிரிழையில் படம் முழுக்க ஆங்காங்கே ஹாஸ்யம் பொதிந்த சுவாரஸ்ய முடிச்சுகள்.

பத்துப் பேரை ஒரே அடியில் வீழ்த்தி, எட்டுப் பக்கங்களில் வசனம் பேசி, ஆறு பாடல்களில் துள்ளிக்குதித்து, நான்கு சண்டைக் காட்சிகளில் ரத்தம் கொதித்து, காதலி - தங்கை அல்லது அம்மா என இரண்டு பெண்களின் பாச மழையில் திணறி... ஃபார்முலாவுக்குள் வட்டமடித்த விஜய், நடிக்கக் கிடைத்த வாய்ப்பை நண்பன் படத்தில் சிக்கெனப் பற்றிக் கொண்டிருக்கிறார். நக்கல், நையாண்டி, குசும்பு, கும்மாளம்... என விஜய்யின் நடிப்பில் பரவச பல்ப்; உற்சாகத் தாண்டவம். நண்பர்கள் முதல் காதலியின் அக்கா வரை அனைவரிடமும் விஜய் அறை வாங்குவதை அவரது ரசிகர்கள் ரசிக்கா விட்டாலும், நடிகனாகத் தனக்குத்தானே தட்டிக்கொடுத்து நெஞ்சை நிமிர்த்த நிறைய வாய்ப்பை நண்பன் தந்திருக்கிறது. கேமராவைப் பார்க்காமல் நடிக்கச் சிரமப்படுவது மட்டும் திருஷ்டிப் பொட்டு.

இயல்பு மாறாத நடிப்பில் எடுத்த எடுப்பிலேயே, சேவாக் பேட் போல சிக்ஸர் அடிப்பது ஜீவாவுக்கு ஒன்றும் புதிதில்லை. நண்பனிலும் அந்த டச் செம நச். நெற்றியில் திருநீறு, நெஞ்சுக்குள் பயம், இளமைக் குறும்பு, எதிர்கால கனவு... எல்லாமும் மாறி மாறிப் பளிச்சிடுகிற பாத்திரத்தை நடிப்பால் துலக்கித் துலக்கிப் பளிச்சிட வைக்கிறார்.

கேரக்டரின் உக்கிரம் தாங்கமுடியாமல் தவிப்பது ஸ்ரீகாந்துக்கு மைனஸ்தான். இன்ஜினீயரிங் வேண்டாம்; ஃபோட்டோ கிராபி போதும் என அவர் அப்பாவிடம் கலங்குவது சென்டிமெண்டுக்கு ஓகே. சத்யன் சிரிப்புக்கு உத்தரவாதம். நடிப்பின் பக்கமும் வந்து போகிறார்.

இலியானா - கவர்ச்சி காரமிளகாய். தம் இடுப்பைப் போல தக்குனூண்டு கேரக்டர். அதில் விஜய்யைக் கூடுமானவரை காதலிக்கிறார். அப்புறம் அரைகுறை ஆடையில் ஆட்டம் போடுகிறார்... இது போதுமென ஷங்கர் சொல்லி இருப்பார் போல... அதனால் க்ளைமாக்ஸ் காட்சியில் விஜய்யைக் கட்டிப்பிடித்துக் கரம் சேர்கிறார். போதும் போதுமென இதிலேயே ரசிகன் கிறங்கிப் போய் ஜென்மசாபல்யம் அடைகிறான்.

அஸ்கு லஸ்கு பாடல் யூத்களின் நேஷனல் ஆன்தம். பாடல்களில் ஹாரீஸ் ஜெயரான் காதுகளை வருடினாலும் பின்னணியில் மனம் கொள்ளைப் போகிறது. மனோஜ் பரமஹம்சாவின் கேமராவில் யார் சிக்கினாலும் அழகாகத் தெரிவார்கள் போல. உயிரற்ற காலேஜ் கட்டடங்கள்கூட உயிர்ப்பாகப் பதிவாகி இருக்கின்றன. ஆண்டனியின் கத்திரியில் ஆளுமை... ஆளுமை... கார்க்கியின் வசனம் படத்தின் சென்டர் பில்லர்.

உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானி விஜய்யைப் பற்றி ஒருத்தருக்குக் கூடவா தெரியாது? அதுவும் உற்ற தோழர்களுக்கும் தெரியாமல் இருப்பது உலகமகா பூச்சுற்றல். ஆல் ஈஸ் வெல் சொல்லு எல்லாம் சரியாகும் என்று சொல்லும் படத்தில் ஜீவா, ஸ்ரீகாந்த், சத்யன்... மூவரும் ஆனந்தப்படும் போதெல்லாம் அண்ட்ராயரைக் கழற்றுவது ஆல் ஈஸ் வெல்லா இயக்குனர் ஷங்கர் ஸார்? என்றாலும் சுதந்திரமான கல்வி, மனோதிடம், நம்பிக்கை இரண்டையும் வளர்த்தெடுக்கும் என்ற கசப்பான அறிவுரையை இனிப்புத் தடவி மாத்திரையாகத் தந்திருக்கிறார் ஷங்கர்.

நண்பன் - ஆல் ஈஸ் நாட் பேட்!
 

துப்பாக்கி திரைப்படத்தை வாங்கியது ஜெமினி நிறுவனம்

 
 
 
 

விஜய் நடிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் துப்பாக்கி திரைப்படத்தை ஜெமினி நிறுவனம் வாங்கியுள்ளது.
இந்த வருடத்தின் மிகப் பெரிய எதிர்ப்பார்ப்புகளுடன் உருவாகி வரும் திரைப்படம் துப்பாக்கி.

ஏ.ஆர்.முருகாதாஸ் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் இத்திரைப்படத்தில் விஜய் கதாநாயகனாகவும், காஜல் அகர்வால் கதாநாயகியாகவும் நடித்து வருகிறார்கள்.
சமீபத்தில் வெளியான நண்பன் திரைப்படத்தின் வெற்றியையடுத்து நடிகர் விஜய் தன் உயர் நிலையை அப்படியே தக்கவைத்துக் கொண்டுள்ளார்.
இதற்கிடையில் தற்போது துப்பாக்கி திரைப்படத்தை ஜெமினி பிலிம் சர்கியூட் நிறுவனம் வாங்கியுள்ளது.
இதனால் படக்குழுவினர் மிகுந்த மகிழ்ச்சியில் இருப்பதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.

Sunday, January 29, 2012

விஜய்க்கு பொருத்தமான கதாநாயகி யார்? Who looks more hotter to Vijay?

இளைய தளபதி விஜய் நிறைய கதாநாயகிகளுனட் திரையில் நடித்திருந்தாலும். சில
டூயட் பாடல்களே கண்ணில் வந்து போகக்கூடியன.
சிலரோடு கெமிஸ்ட்டரி ஒத்துப்போகும்.. சிலரோடு தங்கை போல இருக்கும்..
சிலரோடு பார்க்கையில் ஆன்டி போல இருக்கும்.
உங்களுக்கு யாரோடு விஜய் நடித்தால் நன்றாக இருக்குமென நினைக்கிறீர்கள்
என்பதை பக்கத்திலுள்ள சர்வேயில் குறிப்பிடுங்கள்.
பெப்பிரவரி 14 அன்று வரை கணக்கெடுப்பு நடக்கும்.
காணப்படும் கதாநாயகிகளின் பெயர்
------------------------------------------------->
த்ரிஷா
அசின்
தமன்னா
நயன்தாரா
சிம்ரன்
ஜெனிலியா
அனுஷ்கா
புதுமுகம்
யாருமில்லை

Monday, January 23, 2012

விஜய் - இவர்தான் இளைய தளபதி

முழு பெயர்: ஜோசப் விஜய் சந்திரசேகர்
பெற்றோர்கள்: எஸ்.ஏ.சந்திரசேகரன் மற்றும் ஷோபா சந்திரசேகரன்
மனைவி: விஜய் ஆகஸ்ட் 25, 1999 அன்று இலங்கை தமிழ் வம்சாவளியை சேர்ந்த
சங்கீதா சொர்ணலிங்கம் என்ற பெண்ணை திருமணம் செய்தார்.
குழந்தைகள்: அவர்கள் இரண்டு குழந்தைகள், 2000 ஆம் ஆண்டு மகன் ஜேசன்
சஞ்சய் லண்டனில் பிறந்தார்.மகள் 2005 இல் திவ்யா சாஷா சென்னையில்
பிறந்தார்.
பள்ளி நாட்கள்: சென்னை சாலிக்ராமமத்தில் உள்ள பலலோக் மெட்ரிக்குலேசன்
மேல்நிலை பள்ளி
கல்லூரி நாட்கள்: B.Sc Visual Communication,லயோலா கல்லூரி, சென்னை.
பிறந்த தேதி: ஜூன் 22, 1974
தமிழ் முதல் திரைப்படம் : நாளைய தீர்ப்பு
நடிகர் விஜய் பற்றி தெரியாத உண்மைகள்:
விஜய் சாலிக்ராமத்தில் உள்ள பாத்திமா பள்ளியில் LKG மற்றும் UKG
படிக்கும் போது அவர் தனது தந்தையிடம் இருந்து பணத்தை எடுத்து, அவரது சக
மாணவர்களுக்கு பென்சில், ரப்பர் மற்றும் பேனா வாங்கி கொடுப்பாராம்.
சமீபத்தில் பாத்திமா பள்ளி 50 வது ஆண்டு நிறைவு விழா கொண்டாட்டத்தில்
விஜய்-க்கு அழைப்பு விடுத்தனர்.தான் படித்த பள்ளியிலே
சிறப்புவிருந்தினாரக அழைத்தது விஜயின் வாழ்கையில் மறக்க முடியாத அனுபவம்.
அவரது 9 - வது ஆண்டில் அவரது இளைய சகோதரி வித்யா இறந்தது விஜயின்
குடும்பத்தில் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியது. அவரது நினைவாக v .v
க்ரியேஷன்ஸ் (வித்யா-விஜய்) என்ற தயாரிப்பு நிறுவனம் தொடங்கப்பட்டது.
நாளைய தீர்ப்பு மற்றும் பந்தயம் இந்த பட்டங்கள் v .v க்ரியேஷன்ஸ்
கீழ் தயாரிக்கப்பட்டன. வருடத்திற்குஒருமுறை அவர் தனது சகோதரி பிறந்த
நாள் கொண்டாடுகிறார். அவர் இந்த நாளில் படங்களில் படப்பிடிப்பு கலந்து
கொள்வது இல்லை.விஜய் மூன்று திருமண மண்டபங்கள் உள்ளது, இந்த
திருமணமண்டபத்தில் நடந்த முதல் திருமணம் இலவசமாக நடத்தப்பட்டன. விஜய்
பிடித்த நிறம் கருப்பு . அவரது தந்தை கூடகருப்பு நிற கார்தான்
பயன்படுத்துகிறார். விஜய் பிடித்த எண் 8. விஜய் படபிடிப்புகளுக்கு
செல்வதற்குதனது BMW கார் பயன்படுத்துகிறார். விஜய் வீட்டில் எப்போது
அவர் சரவணா பவன் சாப்பாடு குறைந்த பட்சம் ஒரு நாளைக்கு ஒரு முறையாவது
உண்ண வேண்டும் என்று விரும்புகிறார்.
வணிக தூதுவர்:(பிராண்ட் அம்பாசிடர்)
விஜய் கோகோ கோலா போன்ற பல வணிக விளம்ரங்களில் தோன்றினார். அவர்
கத்ரீனா கைஃப் இணைந்து, தென்னிந்திய கோகோ கோலா விளம்பரங்களில்
நடித்தார். 2008 ல், விஜய், நடிகை நயன்தாரா இணைந்து, இந்தியன் பிரீமியர்
லீக் (ஐபிஎல்) கிரிக்கெட் அணி சென்னைசூப்பர் கிங்ஸ்-க்கு நட்சத்திரதூதராக
ஒப்பந்தம் செய்யப்பட்னர். ஜனவரி 2009 ல், விஜய் மீண்டும் கோகோ கோலா
பொருட்களின் விளம்பர தூதராக தேர்வு செய்யப்பட்டார். ஆகஸ்ட் 2010 வரை,
விஜயை தங்கள் வர்த்தகதூதராக ஜோஸ் அலுக்காஸ் அறிவித்தது.
அரசியலில் விஜய்
2009ம் ஆண்டு விஜய் தனது ரசிகர் நற்பணி மன்றங்களை மக்கள் இயக்கம் என்ற
பெயரில் ஒரு அரசியல் அமைப்பாக மாற்றினார். இவர் சோனியா காந்தியின் மகனான
ராகுல் காந்தி-யை சந்தித்து அரசியல் ரீதியாக பேசியுள்ளார் என்பது
குறிப்பிடத்தக்கது. இவ்வமைப்பு2011 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக
கூட்டணியில் இருந்து கொண்டு அக்கட்சிக்கு ஆதரவு தந்தது.
தமிழ் திரைப்படத்தில் விஜய் சம்பளம்:
தகவலின் படி நண்பன் திரைப்படத்திற்காக விஜய் 14 கோடி வாங்கினாராம்.
விஜய் அவரது அடுத்த படத்திற்காக 16 கோடி எதிர்பர்கிறாராம்.
1990 ஆம் ஆண்டிலிருந்து 1999 வரை உள்ள படங்கள்
சட்டம் ஒரு விளையாட்டு,நான் சிகப்பு மனிதன்,வெற்றி போன்ற படங்களில்
குழந்தை நட்சத்திரமாக தோன்றினாலும் நாளைய தீர்ப்பு படம் மூலமாக தான்
இவர் கதாநாயகனாக அறிமுகமானார். விஜய் தனது 18 வயதில் அவரது தந்தை, எஸ்.ஏ.
சந்திரசேகர் இயக்கத்தில் 1992 ஆம் ஆண்டு நாளைய தீர்ப்பு திரைப்படம் ஒரு
முன்னணி நடிகராக அறிமுகப்படுத்தப்பட்டார். அவரது இரண்டாவது படம்,
செந்தூரபாண்டி - ல் விஜயகாந்த் உடன் இணைந்து நடித்தார்.இந்த படம் இவரை
பிரபலப்படுத்த உதவியது. அவரது பின்வரும் படமானரசிகன் மற்றும் தேவா
அனைத்து குறைந்த பட்ஜெட் படங்களே.
"தல" மற்றும் "தளபதி" கூட்டணி
1994ல் வெளிவந்த விஜய்யின் ஐந்தாவது படமான ராஜாவின் பார்வையிலே-வில்
நடிகர் அஜித் குமார் உடன் இணைந்து நடித்தார்.இந்த படத்தை ஜானகி சௌந்தர்
இயக்கினார்.இளையராஜா இந்த படத்திற்கு இசை அமைத்தார்.இந்த ஆண்டு தனது
காதல் கலந்த நகைச்சுவை படமான விஷ்ணு மற்றும் சந்திரலேகா
வெளியிடப்பட்டது.
1995 ஆம் ஆண்டு, விஜய்யின் கோயம்புத்தூர் மாப்பிள்ளை ரொமாண்டிக்
காமெடி படத்தை தொடரந்தது,வெற்றி பட இயக்குனர் விக்ரமன் -இயக்கிய பூவே
உனக்காக-வில் விஜய் ஒரு அங்கீகரிக்கப்பட்ட நடிகராக மாறியதுடன், இந்த
படம் தமிழ் சினிமா பிளாக்பஸ்டர் பட்டியலில் இடம் பெற்றது. தொடர்ந்து
விஜய் மாண்புமிகு மாணவன்,வசந்த வாசல் மற்றும் செல்வா வெளிவந்தன.
காலமெல்லாம் காத்திருப்பேன் மற்றும் லவ்டுடே போன்ற மனதில் நீங்கா காதல்
படங்களை விஜய் தமிழ் சினிமாவிற்கு கொடுத்தார்.புகழ்பெற்ற தமிழ் திரைப்பட
நடிகர் சிவாஜி கணேசன் உடன் இணைந்து ஒனஸ் மோர் படத்தில் நடித்தார்.
அவரது அடுத்த படம், மணிரத்னம் தயாரிப்பில், வசந்த் இயக்கத்தில் நேருக்கு
நேர் படத்தில் நடித்து புகழ் பெற்றார். இந்த படம் மாபெரும் வெற்றி
பெற்று தனது இரண்டாவது பிளாக் பஸ்டர்-யை பதிவு செய்தார். காதலுக்கு
மரியாதை படம் மூலம் அவருக்கு சிறந்த நடிகருக்கான தமிழ்நாடு மாநில
திரைப்பட விருது கிடைத்தது.அதே சமயத்தில் இந்த படமும் வெற்றி நடை
போட்டது.
1998 ல், விஜய் நினைத்தேன் வந்தாய், ப்ரியமுடன் மற்றும் நிலவே வா
வெளிவந்தன. 1999 இல், அவரது படம் துள்ளாத மனமும் துள்ளும் (சூப்பர்
ஹிட் திரைப்படம்) படம் அவருக்கு பின்வரும் ஆண்டில் தமிழ்நாடு மாநில
திரைப்பட விருதுகள் விழாவில் சிறப்பு பரிசு பெற உதவியாய் இருந்தது.
தொடர்ந்து என்றென்றும் காதல், நெஞ்சினிலே, மின்சார கண்ணா போன்ற வெற்றி
படங்களை கொடுத்தார்

Sunday, January 22, 2012

விஜய்யை அடிக்க தயங்கிய ஸ்ரீகாந்த்…!

நீண்ட இடைவெளிக்கு பிறகு ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்துள்ள நண்பன் படம்
மூலம், நடிகர் ஸ்ரீகாந்த்திற்கு ஒரு பிரேக் கிடைத்திருக்கிறது என்றால்
அதுமிகையல்ல. விஜய், ஜீவா ஆகியோருடன் சேர்ந்து ஸ்ரீகாந்தும் நண்பன்
படத்தில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இந்நிலையில் நண்பன்
படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் நடிகர் விஜய்யை, ஜீவாவும், ஸ்ரீகாந்தும்
அடிப்பது போன்று ஒரு காட்சி. ஆனால் இந்த காட்சியில் நடிக்க தயங்கியதாக
ஸ்ரீகாந்த் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது, ஜீவாவும், நானும் விஜய்யை அடிப்பது
போன்று காட்சி. ஆனால் இதில் நடிக்க நான் தயங்கினேன். பிறகு விஜய்யே வந்து
தயங்காதீர்கள், இந்த காட்சிக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு இருக்கும்
என்று உற்சாகப்படுத்தினார். அதன்பின்னர் அந்தகாட்சியில் நடித்தேன். விஜய்
‌சொன்னது போன்று பலரும் அந்தக்காட்சியை பாராட்டினார்கள்.
சூட்டிங்கில்மூவரும் நல்ல நண்பர்களாகத்தான்இருந்தோம். நண்பன் படம் மூன்று
ஹீரோ சப்ஜெக்ட் என்றாலும் மூவருக்கும் சமமான கேரக்டர் தான். இதனால்
மூவரும் தங்களது நடிப்பை வெளிப்படுத்த முடிந்தது. அப்படி ஒரு
கேரக்டரைஅமைத்து கொடுத்த டைரக்டர் ஷங்கர் சாருக்கு நன்றி. ஷங்கர் சார்
டைரக்டர் மட்டுமல்ல, ஒரு சிறந்த நடிகரும் கூட. அவர் எப்படி நடிக்க
சொன்னாரோ, அதன்படி அப்படியே நடித்தேன் என்றார்.

விஜய்யின் 'நண்பன்' 10 நாளில் ரூ. 110 கோடி வசூல்?

விஜய் நடிப்பில் , பொங்கலுக்கு வெளியாகி ஓடிக் கொண்டுள்ள நண்பன் படம்
வசூல் சாதனை படைத்து வருவதாக செய்திகள் கூறுகின்றன. படம் வெளியாகி 10
நாட்கள் ஆகி விட்ட நிலையில் இதுவரை ரூ. 110 கோடியை அது
வசூலித்துள்ளதாகவும் கூறுகிறார்கள்.
படம் வெளியிடப்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் நல்ல வரவேற்புடன்ஓடி
வருவதாகவும் , விஜய் மற்றும்மற்றவர்களின் நடிப்புக்கு மக்கள் மத்தியில்
நல்ல வரவேற்பு காணப்படுவதாகவும் கூறப்படுகிறது.
படத்தில் விஜய் உள்ளிட்ட அத்தனை பேரும் இயல்பாக நடித்துள்ளதை அனைவரும்
ரசிப்பதாலும் , வித்தியாசமான விஜய்யைப் பார்க்க ரிபீட் ஆடியன்ஸ்
எனப்படும் மீண்டும் மீண்டும் பார்க்க விரும்பும் ரசிகர்களின் எண்ணிக்கை
அதிகரித்து வருவதாலும்தான் படம் பெரும் வெற்றி பெற்றிருப்பதாக
கூறுகிறார்கள்.
மேலும் வசூல் சாதனைகளை இது படைக்க ஆரம்பித்திருப்பதாகவும் கூறுகிறார்கள்.
பன்ச் டயலாக்குகளில் மட்டுமல்லாமல் பாந்தமான நடிப்பாலும் தன்னால் அசத்த
முடியும் என்பதை விஜய் நிரூபித்து விட்டார் என்பதுதான் இந்தப் படத்தின்
டாப் ஹைலைட்டாக அமைந்துள்ளது.
விஜய் மட்டுமல்லாமல் ஜீவா , ஸ்ரீகாந்தக் , சத்யன் , சத்யராஜ் என மற்ற
கலைஞர்களின் நடிப்புக்கும் பிரமாதமான வரவேற்பு கிடைத்துள்ளதாம்.
இதுவரை விஜய் நடித்து வெளியான படங்களிலேயே இதுதான் பெஸ்ட் என்ற பேச்சும்
படத்திற்கு பெரும் விளம்பரமாக அமைந்து விட்டது என்கிறார்கள்
திரையுலகினர்.
விஜய் பட வசூல் குறித்து இதுவரைபடத் தயாரிப்புத் தரப்பில்
அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படவில்லை என்ற போதிலும் பத்து நாட்களில் ரூ.
110 கோடி வசூல் என்ற பேச்சே அந்தப் படத்திற்கு இன்னொரு விளம்பரமாக
அமையும் என்பதில் சந்தேகமில்லை.

Saturday, January 21, 2012

100 கோடியை நோக்கி !:நண்பன்

ஷங்கர் இயக்கத்தில் விஜய் , ஜீவா , ஸ்ரீகாந்த் , சத்யராஜ் , இலியானா ,
சத்யன் உள்ளிட்ட பலர் நடித்து வெளியாகி இருக்கும் படம் ' நண்பன் '.
இந்தியில் வரவேற்பை பெற்ற 3 இடியட்ஸ் படத்தின் ரீமேக் என்பதால்
படத்திற்கு பெரும் எதிர்ப்பார்ப்பு நிலவி வந்தது. அதனை பூர்த்தி
செய்யும் வகையில் 12ம் தேதியே படத்தினை வெளியிட்டார்கள்.
தமிழகத்தில் மட்டும் 625 திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது நண்பன்.
முதல் வாரத்தில் சுமார் 40 கோடியை கல்லா கட்டியிருக்கிறதுநண்பன். படம்
வெளியான முதல் நான்கு நாட்களுக்கு அனைத்து திரையரங்குகளிலும் 95%
நிரம்பியதால் எதிர்ப்பார்த்தை விட நல்ல வசூலாம்.
' எந்திரன் ' படத்தினை அடுத்து அதிக திரையரங்குகள் , மக்களிடம்
கிடைத்திருக்கும் வரவேற்பு , கேரளா , வெளிநாட்டு உரிமை , தெலுங்கு
டப்பிங் உரிமை , இசை உரிமை , டிவி உரிமை என அனைத்தையும் கணக்கிட்டால் 100
கோடியை தாண்டுவது உறுதி என்கிறார்கள் தமிழ் திரையுலகில்.
இதுவரை எந்த ஒரு விஜய் படத்திற்கும் கொடுக்காத விலையைகொடுத்து ' நண்பன் '
படத்தின் தொலைக்காட்சி உரிமையை வாங்கி இருக்கிறது விஜய் டிவி என்பது
குறிப்பிடத்தக்கது.

Friday, January 20, 2012

துப்பாக்கியில் இன்னோரு தோட்டா !

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் ' துப்பாக்கி '.
விஜய் , காஜல் அகர்வால் நடிக்க , ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். சந்தோஷ்
சிவன் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வருகிறார்.
' ஸ்மாக் தட் ' என்ற ஒரே ஆல்பத்தின் மூலம் இசை உலகில் புகழின்
உச்சத்திற்கு சென்றவர்அகான். முதன் முதலாக இந்தி திரைப்படமான ' ரா.ஒன் '
படத்தில் ' சம்மக் சலோ.. ' என்ற பாடலை பாடினார். அப்பாடல் இந்தி
திரையுலகில் பெரும் வரவேற்பை பெற்றது.
மும்பை வழியே சென்னைக்குள்ளும்நுழைகிறது அகான் குரல். அகான் '
துப்பாக்கி ' படத்திற்காக ஒரு பாடலை பாட இருக்கிறார். இப்பாடல் பதிவு
விரைவில் சென்னையில் நடைபெற இருக்கிறது.
ரா.ஒன் ' சம்மக் சலோ ' பாடலைவிட அதிகமாக இப்பாடல் வரவேற்பை பெற வேண்டும்
என்று மெனக்கெட்டு வருகிறாராம் ஹாரிஸ்.
விஜய் , ஏ.ஆர்.முருகதாஸ் , சந்தோஷ்சிவன் , ஹாரிஸ் ஜெயராஜ் , அகான் என
தோட்டாக்களை நிரப்பி வருகிறது ' துப்பாக்கி ' !

Monday, January 16, 2012

நண்பன் படத்திற்கு தடை ?!

"நண்பன் படத்தில் , இந்திய ஜனநாயகக் கட்சி நிறுவனரின் புகழை
களங்கப்படுத்தி , அவதூறான வார்த்தைகளை பயன்படுத்தியுள்ள , இயக்குனர்
ஷங்கர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் ; படத்தை தடை செய்ய வேண்டும்
எனக்கோரி , அக்கட்சியின் பொதுச் செயலர் ஜெயசீலன் , காவல் துறை கமிஷனரிடம்
புகார் மனு அளித்துள்ளார்.மனுவில் கூறியிருப்பதாவது:ஷங்கர் இயக்கிய , "
நண்பன் படத்தில் , மோசடி கதாபாத்திரத்திற்கு , " பாரிவேந்தர் என்று பெயர்
சூட்டியிருக்கிறார்.
இன்னொரு பெண் கதாபாத்திரம் மதுபோதையில் , " பாரிவேந்தராவது ,
பூரிவேந்தராவது என்றும் ; மற்றும் ஒரு இடத்தில் , " பாரி , பூரி ,
கக்கூஸ் லாரி என்றும் , வசனத்தை பயன்படுத்தி இருக்கிறார். இதன் மூலம் ,
பல லட்சம் மக்களால் பாரிவேந்தர் என்று அழைக்கப்படுகிற எங்கள் கட்சியின்
நிறுவனர் புகழுக்கு களங்கம் ஏற்பட்டிருக்கிறது.இதற்கு முன்பாக , அவர்
இயக்கிய , " சிவாஜிபடத்தில் , தமிழினத்தின் அடையாளமான வள்ளல் பாரியின்
மகள்களான அங்கவை , சங்கவை ஆகிய இருவரையும் , கறுப்பாக சித்தரித்து ,
தமிழ்ப் பெண்கள் கறுப்பானவர்கள் என்றும் , யாரும் அவர்களை உரிமையாக்கிக்
கொள் ளலாம் என்றும் சித்தரித்திருக்கிறார்.
வேறு ஒரு படத்திலும் , பல லட்சம் கட்சி மற்றும் பார்க்கவ குல
சமுதாயத்தால் போற்றப்படுகிற எங்களுடைய தலைவரின் பெயரை , குடிகாரனுக்கு
சூட்டி , அவன் , பெண்களிடம் தகாத முறையில் நடப்பது போல காட்சி அமைத்து ,
அவர் பெயரை களங்கப்படுத்தி இருக்கிறார்.இவ்வாறு , எங்கள் நிறுவனத் தலைவர்
புகழை கெடுக்கும் விதமாக இயக்குனர் ஷங்கர் , அவதூறான , தரக்குறைவான ,
சட்டத்திற்கு புறம்பானவைகளை , தவறான உள்நோக்குடன் பயன்படுத்தி , தன்
படத்திற்கு விளம்பரம் தேடிக் கொள்கிறார்.எங்கள் நிறுவனர் , அவரை
பின்பற்றுகிற கட்சி மற்றும் சமுதாய மக்களின் மனதை புண்படுத்தி களங்கம்
கற்பித்த ," நண்பன் பட இயக்குனர் சங்கர் மற்றும் தயாரிப்பாளர் மீது
வழக்குப் பதிந்து , சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு ,
மனுவில் கூறப்பட்டுள்ளது.

Saturday, January 14, 2012

புயல் பாதித்த மக்களுக்கு மேலும் உதவிகள் - விஜய் அறிவிப்பு

புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மேலும் உதவிகள் செய்யப் போவதாக நடிகர்
விஜய் தெரிவித்தார்.
நடிகர் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் புதுவை மக்களுக்கு இன்று நிவாரண
உதவிகள் வழங்கப்பட்டது. புதுவை சுப்பையா சாலையில் உள்ள குபேர் திருமண
மண்டபத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் கலந்து கொள்வதற்காக நடிகர் விஜய் பகல் 11.45 மணியளவில் புதுவைக்கு
வந்தார். அப்போது பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டிருந்தனர். விஜய்யை
பார்த்ததும் அவர்கள் ஆரவாரமாக கோஷமிட்டனர். அவர்களை பார்த்து கையசைத்து
மகிழ்ச்சி தெரிவித்த விஜய் விழா மேடைக்கு வந்தார்.
பின்னர் நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி தொடங்கியது. அகில இந்திய விஜய்
ரசிகர் மன்ற தலைவரும் , புதுவை முன்னாள் எம்.எல்.ஏ.வுமான புஸ்சிஆனந்த்
நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச அரிசி , ஆடைகள் , போர்வை , பாய் ,
பாத்திரங்கள் உள்ளிட்ட நிவாரண உதவிகளை வழங்கினார் நடிகர் விஜய். அப்போது
அவர் பேசுகையில் , " இந்த நிகழ்ச்சியை முன்கூட்டியே நடத்தி பாதிக்கப்பட்ட
மக்களுக்கு உதவிவழங்குவதாக இருந்தது. ஆனால் சூட்டிங் காரணமாக என்னால்
முன்கூட்டி வரமுடியவில்லை.
நாங்கள் இப்போது அளித்துள்ள உதவி சிறிய அளவிலானது தான். இன்னும் இதுபோன்ற
உதவிகளை செய்வோம். அனைவருக்கும் என் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துக்
கொள்கிறேன் ," என்றார்.
முன்னதாக விஜய் புதுவையில் புயலால் பாதிக்கப்பட்ட
இடங்களைசுற்றிப்பார்த்து அங்குள்ள மக்களுக்கு ஆறுதல் கூறினார்.
விரைவில் கடலூர் மக்களையும் சந்தித்து உதவி வழங்குவதாக அவர் தெரிவி்த்தார்.

நண்பன் படத்துக்கு முழு வரிவிலக்கு - ஜெ ஆட்சியில் வரிவிலக்கு பெற்ற முதல்படம்!

நண்பன் படத்துக்கு முழு வரிவிலக்கு அளித்துள்ளது அரசு. ஜெயலலிதா
ஆட்சியில் வரிவிலக்கு பெற்றுள்ள முதல் படம் நண்பன் என்பது
குறிப்பிடத்தக்கது.
தமிழில் தலைப்பு வைத்தாலே போதும், வரி விலக்கு உண்டு என்று முன்பு
கருணாநிதி ஆட்சிக் காலத்தில் அறிவிக்கப்பட்டது. இதனால் தரமற்ற குப்பைப்
படங்களும் தமிழில் தலைப்பு வைத்ததற்காக வரி விலக்கு பெற்றன.
For free News videos
ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததும், தமிழில் பெயர் வைத்தால் மட்டும் போதாது...
அனைவரும் பார்க்கத்தக்க யு சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும், தரமான படமாக
இருக்க வேண்டும். அப்போதுதான் வரிவிலக்கு என நிபந்தனைகள் விதித்தது.
வரிவிலக்கு பெறத் தகுதியான படங்களை தேர்வு செய்ய 22 பேர் கொண்ட
குழுவையும் அமைத்தது அரசு. இதில் இயக்குநர்கள்,நடிகர்கள்,
தயாரிப்பாளர்கள், இசையமைப்பாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.
இந்தக் குழு பார்த்து பரிந்துரைக்கும் படத்துக்கே வரிவிலக்கு கிடைக்கும்.
வரிவிலக்குக்கு படங்களை அனுப்ப ரூ 10000 கட்டணம் உண்டு.
இந்த நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் விஜய் நடித்துள்ள நண்பன்
படம் இருப்பதால் படத்துக்கு முழு வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.ஷங்கர்
இயக்கத்தில்,விஜய்யுடன் ஜீவா, ஸ்ரீகாந்த், சத்யராஜ் நடிக்க பொங்கலுக்கு
வெளியாகியுள்ள இந்தப் படத்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு
கிடைத்துள்ளது. இந்தநிலையில் வரிவிலக்கு அறிவித்துள்ளது வசூலை மேலும்
அதிகரிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
ஜெயலலிதா பதவிக்கு வந்த இந்த 7 மாதங்களில் வரி விலக்கு பெற்றுள்ள முதல்
படம் நண்பன் மட்டும்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags: நண்பன் , nanban

Friday, January 13, 2012

விஜய் நாளை புதுவை வருகை: புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி வழங்குகிறார்

தானே புயலால் புதுவை பகுதி முழுவதும் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த
நிலையில் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்க நடிகர்
விஜய் நாளை (சனிக்கிழமை) புதுவைவருகிறார்.
புதுவை சுப்பையா சாலையில் குபேர் திருமண மண்டபம் அருகே காலை 9 மணிக்கு
நடைபெறும் நிகழ்ச்சியில் நடிகர் விஜய் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு
அரிசி , உடை , பாத்திரங்கள் உள்ளிட்டவற்றை வழங்குகிறார்.
நிகழ்ச்சிக்கு அகில இந்திய விஜய் ரசிகர் மன்ற தலைவர் புஸ்சி ஆனந்து தலைமை
தாங்குகிறார். நிகழ்ச்சியில் விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகள் மற்றும்
பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ளும்படி புஸ்சி ஆனந்து கேட்டுக்
கொண்டுள்ளார்.

Tuesday, January 10, 2012

நண்பன் டிக்கெட் விற்பனை அபாரம்!

விஜய் , ஜீவா , ஸ்ரீகாந்த் , சத்யராஜ் , இலியானா நடிப்பில் வெளியாக
இருக்கும் படம் நண்பன் , ஷங்கர் இயக்க , ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து
இருக்கிறார். ஜெமினி நிறுவனம் இப்படத்தினை தயாரித்து இருக்கிறது.
நண்பன் படம் 2011ம் ஆண்டே வெளியீட்டிற்கு தயாராக இருந்தாலும் விஜய்
நடிப்பில் வேலாயுதம் படம் வெளியானதால் 2012ல் பொங்கல் அன்று
வெளியீடுஎன்று அறிவிக்கப்பட்டது.
இந்தியில் வரவேற்பை பெற்ற 3 இடியட்ஸ் படத்தின் தமிழ் ரீமேக் , நாயகனாக
விஜய் , ஷங்கர் இயக்கம் , ஹாரிஸ் இசை என இப்படத்திற்கு பெரும்
எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது.
இந்த எதிர்ப்பார்ப்பை பூர்த்திசெய்யும் வகையில் 12ம் தேதியே படத்தினை
வெளியீட தீர்மானித்துஇருக்கிறார்கள். படத்திற்கு டிக்கெட் புக்கிங்
ஆரம்பான சிறிது நேரத்திலேயே பெரிய தியேட்டர்கள் அனைத்திலும் முதல் 2
நாட்களுக்கு டிக்கெட் விற்பனை முடிந்துள்ளது.
ரசிகர்களின் இந்த வரவேற்பால் பெரும் சந்தோஷத்தில் இருக்கிறது படக்குழு.

Tuesday, January 3, 2012

அதிகளவு திரையரங்குகளை கைப்பற்றிய நண்பன்

 
 

தமிழ் திரையுலகில் வருகிற பொங்கலுக்கு நண்பன், வேட்டை திரைப்படங்கள் வெளியிடப்படுகின்றன.
தமிழ் திரையுலகில் பெரிய இயக்குனர்கள் இயக்கியுள்ள நண்பன், வேட்டை திரைப்படங்கள் பொங்கலுக்கு திரையிடப்பட உள்ளன.
இயக்குனர் ஷங்கரின் நண்பனில் இளையதளபதி விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் ஆகியோர் நாயகன்களாக நடித்துள்ளனர்.
நண்பன், பாலிவுட்டில் வெளியான 3 இடியட்ஸ் திரைப்படத்தின் ரீமேக் ஆகும். அடுத்ததாக மாதவன், ஆர்யா நடித்துள்ள வேட்டை திரைப்படத்தை இயக்குனர் லிங்குசாமி இயக்கியுள்ளார்.
நாயகிகளாக சமீரா ரெட்டி, அமலா பால் நடித்துள்ளார். ஆர்யா, மாதவன் இருவரும் அண்ணன், தம்பியாக நடித்துள்ளனர். நண்பன், வேட்டை ஆகிய இந்த இரண்டு திரைப்படங்களும் வருகிற பொங்கல் தின கொண்டாட்டமாக தமிழ்நாட்டில் திரையிடப்படுகிறது.
வருகிற 12 ம் திகதி சென்னையில் 20க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் நண்பன், வேட்டை திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன.

நண்பன் சென்சார் வோட் தகவல்

 
 

நண்பன் படம் 2011ம் ஆண்டு விருது வழங்கும் படங்களுக்குள் சேர்க்கப்பட்டுள்ளது. ஏனெனில் இப்படம் 2011ம் ஆண்டு சென்சார் நிறுவனத்தால் u செர்டிபிகாடே வழங்கப்பட்டுள்ளது அனைவரும் பார்க்க கூடிய படமாக வந்துள்ளது என சென்சார் நிறுவனமும் பாராட்டியுள்ளது.
இப்படம் பொங்கல் வெளியீடாக ஜெனவரி 12 வெளிவர உள்ளது.
 

மும்பைக்கும் சென்னைக்கும் அடிக்கடி போகும் விஜய்

 
 
ஒரே ஷெட்யூல்ல 'துப்பாக்கி'யோட பெரும்பகுதியை முடிக்க ஏ.ஆர்.முருகதாஸ் திட்டமிட்டிருக்கறதால ஒரு மாசமா மும்பைல இருக்கிற விஜய், 'நண்பன்' ஆடியோ ரிலீஸை வச்சு கோவைக்கும், சென்னைக்கும் வந்து போனார். இன்னும் ஒரு மாசம் மும்பை வாசமாம்.

2011-ல் பிரகாசித்த 'டாப் 10' நடிகர்கள்

 
 
தமிழ் திரையுலகில் 2011-ல் விக்ரம், அஜீத், விஜய், சூர்யா, தனுஷ், கார்த்தி உள்ளிட்டோரின் ஆதிக்கம் பலமாக இருந்தது. புதுமுக நடிகர்கள் படங்கள் கால் ஊன்றவில்லை. ரஜினிக்கும் கமலுக்கும் கடந்த வருடம் படங்கள் ரிலீசாகவில்லை. ஆனாலும் இருவர் மார்க்கெட்டும் உச்ச நிலையலேயே உள்ளது.

விஜய் தனது மார்க்கெட்டை தொடர்ந்து நிலை நிறுத்தி வருகிறார். அவர் நடிப்பில் காவலன், வேலாயுதம் என இரு படங்கள் கடந்த வருடம் வந்தன. இரண்டுமே வசூல் ஈட்டியது. ரசிகர்களையும் கவர்ந்தன. அவரது நண்பன் படம் பொங்கலுக்கு வருகிறது.

துப்பாக்கி, யோஹன் என மேலும் இரண்டு படங்கள் இந்த ஆண்டு வருகின்றன.

ரஜினிக்கு 'ராணா' படப்பிடிப்பில் உடல்நலக்குறைவு ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் பல மாதங்கள் தங்கி சிகிச்சை பெற்றார். 'ராணா' படம் கைவிடப்பட்டு உள்ளது. சென்ற வருட இறுதியில் 'கோச்சடையான்' படத்தில் நடிக்கப்போவதாக அறிவிப்பு வந்தது. இவ்வருடம் இறுதி யில் அப்படத்தை ரிலீஸ் செய்கின்றனர். கமலின் 'விஸ்வரூபம்' படப்பிடிப்பு வெளிநாடு களில் நடந்து வருகிறது. ரூ.120 கோடி மெகா பட்ஜெட்டில் இப்படம் தயாராகிறது.

விக்ரமுக்கு தெய்வத்திருமகள், ராஜபாட்டை என இரு படங்கள் 2011-ல் வெளியாகின. தெய்வத் திருமகள் படத்தில் மனநிலை குன்றியவராக நடித்தார். இந்த வருடம் கரிகாலன், தாண்டவம் என இரு படங்கள் விக்ரம் நடிப்பில் வர உள்ளது.

அஜீத்துக்கு மங்காத்தா படம் கடந்த வருடம் வந்தது. அதிக வசூல் ஈட்டிய படமாக அமைந்தது. தற்போது அவர் நடித்து வரும் 'பில்லா 2' படம் இவ்வருடம் ரிலீசாகிறது.
சூர்யா 7 ஆம் அறிவு படம் மூலமும் கார்த்தி சிறுத்தை படம் மூலமும் சென்ற வருடம் முன்னணி வரிசையில் இருந்தனர். கார்த்திக்கு இவ்வருடம் சகுனி மற்றும் சூராஜ் இயக்கத்தில் ஒரு படம் என இரு படங்கள் வருகின்றன.

தனுசுக்கு 2011 மறக்க முடியாத வருடம் ஆகும். 'ஆடுகளம்' படம் அவருக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்று கொடுத்தது. அவர் எழுதி பாடிய கொலை வெறி பாடல் உலகம் முழுவதும் பிரபலமானது. மயக்கம் என்ன படமும் சென்ற வருடம் வந்தது.

மனைவி ஐஸ்வர்யா இயக்கத்தில் நடிக்கும் '3' படம் விரைவில் ரிலீசாக உள்ளது. ஜீவா 'கோ' படம் ஹிட்டால் பேசப்பட்டார். 'ரௌத்திரம்', வந்தான் வென்றான் என மேலும் இரு படங்களும் அவர் நடிப்பில் வந்தன. ஜெய்க்கு எங்கேயும் எப்போதும் சிறந்த படமாக அமைந்தது.

விஷாலுக்கு அவன் இவன், வெடி, ஜெயம்ரவிக்கு எங்கேயும் காதல், பரத்துக்கு வானம், யுவன் யுவதி, சிம்புக்கு வானம், ஓஸ்தி, கரணுக்கு தம்பி வெட்டோத்தி சுந்தரம் படங்கள் சென்ற வருடம் வந்தன.தமிழ் திரையுலகில் 2011-ல் விக்ரம், அஜீத், விஜய், சூர்யா, தனுஷ், கார்த்தி உள்ளிட்டோரின் ஆதிக்கம் பலமாக இருந்தது. புதுமுக நடிகர்கள் படங்கள் கால் ஊன்றவில்லை. ரஜினிக்கும் கமலுக்கும் கடந்த வருடம் படங்கள் ரிலீசாகவில்லை. ஆனாலும் இருவர் மார்க்கெட்டும் உச்ச நிலையலேயே உள்ளது.

ரஜினிக்கு 'ராணா' படப்பிடிப்பில் உடல்நலக்குறைவு ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் பல மாதங்கள் தங்கி சிகிச்சை பெற்றார். 'ராணா' படம் கைவிடப்பட்டு உள்ளது. சென்ற வருட இறுதியில் 'கோச்சடையான்' படத்தில் நடிக்கப்போவதாக அறிவிப்பு வந்தது. இவ்வருடம் இறுதி யில் அப்படத்தை ரிலீஸ் செய்கின்றனர். கமலின் 'விஸ்வரூபம்' படப்பிடிப்பு வெளிநாடு களில் நடந்து வருகிறது. ரூ.120 கோடி மெகா பட்ஜெட்டில் இப்படம் தயாராகிறது.

விக்ரமுக்கு தெய்வத்திருமகள், ராஜபாட்டை என இரு படங்கள் 2011-ல் வெளியாகின. தெய்வத் திருமகள் படத்தில் மனநிலை குன்றியவராக நடித்தார். இந்த வருடம் கரிகாலன், தாண்டவம் என இரு படங்கள் விக்ரம் நடிப்பில் வர உள்ளது.

அஜீத்துக்கு மங்காத்தா படம் கடந்த வருடம் வந்தது. அதிக வசூல் ஈட்டிய படமாக அமைந்தது. தற்போது அவர் நடித்து வரும் 'பில்லா 2' படம் இவ்வருடம் ரிலீசாகிறது.

விஜய் தனது மார்க்கெட்டை தொடர்ந்து நிலை நிறுத்தி வருகிறார். அவர் நடிப்பில் காவலன், வேலாயுதம் என இரு படங்கள் கடந்த வருடம் வந்தன. இரண்டுமே வசூல் ஈட்டியது. ரசிகர்களையும் கவர்ந்தன. அவரது நண்பன் படம் பொங்கலுக்கு வருகிறது.

துப்பாக்கி, யோஹன் என மேலும் இரண்டு படங்கள் இந்த ஆண்டு வருகின்றன. சூர்யா 7 ஆம் அறிவு படம் மூலமும் கார்த்தி சிறுத்தை படம் மூலமும் சென்ற வருடம் முன்னணி வரிசையில் இருந்தனர். கார்த்திக்கு இவ்வருடம் சகுனி மற்றும் சூராஜ் இயக்கத்தில் ஒரு படம் என இரு படங்கள் வருகின்றன.

தனுசுக்கு 2011 மறக்க முடியாத வருடம் ஆகும். 'ஆடுகளம்' படம் அவருக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்று கொடுத்தது. அவர் எழுதி பாடிய கொலை வெறி பாடல் உலகம் முழுவதும் பிரபலமானது. மயக்கம் என்ன படமும் சென்ற வருடம் வந்தது.

மனைவி ஐஸ்வர்யா இயக்கத்தில் நடிக்கும் '3' படம் விரைவில் ரிலீசாக உள்ளது. ஜீவா 'கோ' படம் ஹிட்டால் பேசப்பட்டார். 'ரௌத்திரம்', வந்தான் வென்றான் என மேலும் இரு படங்களும் அவர் நடிப்பில் வந்தன. ஜெய்க்கு எங்கேயும் எப்போதும் சிறந்த படமாக அமைந்தது.

விஷாலுக்கு அவன் இவன், வெடி, ஜெயம்ரவிக்கு எங்கேயும் காதல், பரத்துக்கு வானம், யுவன் யுவதி, சிம்புக்கு வானம், ஓஸ்தி, கரணுக்கு தம்பி வெட்டோத்தி சுந்தரம் படங்கள் சென்ற வருடம் வந்தன.

2012-ல் எதிர்பார்ப்பில் இருக்கும் படங்கள்

 
 
2011ம் ஆண்டு ரஜினி, கமல் உள்ளிட்ட நடிகர்களின் படங்கள் வெளிவரவில்லை. ஆனால் 2012ம் ஆண்டு தமிழ் திரையுலகில் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்க்கும் தயாரிப்புகள் வெளிவர இருக்கின்றன. அவ்வாறு வெளிவர இருக்கும் சில படங்கள் பற்றிய தகவல் துளிகள் :

ரஜினி : கோச்சடையான் 3D

கே.எஸ்.ரவிகுமார் மேற்பார்வையில் செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்க இருக்கும் படம். போன ஆண்டு 'ராணா' படம் தொடங்கப்பட்ட போது ஏற்பட்ட உடல்நிலை கோளாறால் அப்படம் நிறுத்தப்ப்பட்டது.

ஆகையால் 'கோச்சடையான்' படத்திற்கு பெரும் எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது. MOTION CAPTURE TECHNOLOGY மூலம் ரஜினியை நடிக்க வைக்க இருக்கிறார்கள். 3Dல் இப்படம் வெளிவர இருக்கிறது.

கமல் : விஸ்வரூபம்


கமல் இயக்கி நடித்து வரும் படம். செல்வராகவன் இயக்க, கமல் நடிப்பதாக துவங்கப்பட்ட படம். செல்வராகவனால் ஏற்பட்ட தாமதம் மற்றும் பல்வேறு காரணங்களால் படப்பிடிப்பு தள்ளிப் போக, தற்போது கமலே இயக்குனர் பொறுப்பேற்று இப்படத்தினை இயக்கி வருகிறார்.

கமல் இப்படத்தில் ஒரு தீவிரவாதியாக நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கமல் ரசிகர்கள் அவரை வித்தியாசமான வேடத்தில் பார்க்க இருக்கிறார்கள்.

அஜீத் : பில்லா- 2

'மங்காத்தா' படத்தின் வரவேற்பிற்கு பிறகு அஜீத் நடித்து வரும் படம் 'பில்லா 2'. பில்லா படத்தின் SEQUEL-யாக இல்லாமல் PREQUEL- ஆக பில்லா 2 வெளிவர இருக்கிறது.

இப்படத்திற்காக கடுமையாக உழைத்து இருக்கிறார் அஜீத். உடம்பு இளைத்து, சண்டைக்காட்சிகளில் டூப் இல்லாமல் நடித்து இருக்கிறார்.

2011-ல் மங்காத்தா வசூலைத் 2012-ல் 'பில்லா 2' அமைய வேண்டும் என்ற உறுதியுடன் உழைத்து வருகிறார்கள்.

விஜய் :நண்பன் & துப்பாக்கி

ஷங்கர் இயக்கத்தில் விஜய் நடித்து இருக்கும் படம் 'நண்பன்'. 3 இடியட்ஸ் படத்தின் ரீமேக், ஷங்கர் இயக்கம் , விஜய் நடிப்பு, ஹாரிஸ் இசை என பல விஷயங்கள் இப்படத்தில் இணைந்து இருக்கின்றன. 2012ல் விஜய் ரசிகர்களுக்கு முதல் விருந்தாக ஜனவரி 12ம் தேதி இப்படம் வெளிவர இருக்கிறது. சென்சார் அதிகாரிகள் இப்படத்தினை பார்த்துவிட்டு U சான்றிதழ் அளித்து இருக்கிறார்கள்.

'ஏழாம் அறிவு'க்குப் பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் 'துப்பாக்கி' யில் இப்போது நடித்து வருகிறார் விஜய் . முதன் முறையாக விஜய் இப்படத்தில் வித்தியாசமான கெட்டப்பில் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சூர்யா : மாற்றான்

'அயன்' படக்குழு மீண்டும் இணைந்திருக்கும் படம் 'மாற்றான்'. சூர்யா இப்படத்தில் ஒர் உடல் இரு தலை உடையவராக ஒரு கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டது. கே.வி.ஆனந்த சூர்யா இப்படத்தில் ஐந்து வித்தியாசமான பாத்திரங்களில் நடித்து இருப்பதாக கூறியுள்ளார்.

சிம்பு : போடா போடி

சிம்பு நடிப்பில் நீண்ட நாட்களாக தயாராகி வரும் படம் 'போடா போடி'. விக்னேஷ் சிவா இயக்கி வரும் இப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகிறார் வரலெட்சுமி சரத்குமார். இப்படம் இசையை மையமாக வைத்து வெளிவர இருக்கும் காமெடி படமாம்.

தனுஷ் : 3

2011ல் WHY THIS KOLAVERI என்ற பாடலின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்த தனுஷ் நடித்து இருக்கும் படம். இப்படத்தின் பாடல்களால் படத்திற்கு எதிர்ப்பார்ப்பு கூடி இருக்கிறது. ரஜினி மகள் இயக்கம், கமல் மகள் ஜோடி, ரஜினியின் மருமகன் நாயகன் என ஒரு சேர இணைந்து வெளிவரும் படம்.

வசந்த பாலன் : அரவான்

'அங்காடி தெரு' படத்தினை தொடர்ந்து வசந்தபாலன் இயக்கத்தில் வெளிவர இருக்கும் படம் 'அரவான்'. ஆதி, பசுபதி, தன்ஷிகா மற்றும் பலர் நடித்து இருக்கிறார்கள்.

2011ம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது வென்ற 'காவல் கோட்டம்' நாவலில் வரும் ஒரு சிறு பகுதியை, திரைக்கதை அமைத்து படமாக்கி இருக்கிறார்கள். இப்படத்தின் டிரெய்லரே படத்திற்கு எதிர்ப்பார்ப்பை கூட்டியுள்ளது.

ஆர்யா & மாதவன் : வேட்டை

லிங்குசாமி இயக்கத்தில் ஆர்யா, மாதவன் இணைந்து இருக்கும் படம் 'வேட்டை'. ரன் படத்தினை தொடர்ந்து மாதவனுடன் இணைந்து இருக்கிறார் லிங்குசாமி.

லிங்குசாமி இயக்கம், ஆர்யா, மாதவன் இணைந்திருக்கும் படம், சமீரா ரெட்டி, அமலா பால் என இரண்டு நாயகிகள், இப்படி கலகல, பளபள கூட்டணியில் வருவதால் 'வேட்டை'க்கு காத்திருக்கிறார்கள் ரசிகர்கள். ஜனவரி 14ம் தேதி வெளிவர இருக்கிறது வேட்டை.

கெளதம் மேனன் : நீதானே என் பொன்வசந்தம்

கெளதம் மேனன் இயக்கத்தில் ஜீவா நடித்து வரும் படம். ஒரே நேரத்தில் மூன்று மொழிகளிலும் இயக்கி வருகிறார் கௌதம் மேனன்.

'விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தினை தொடர்ந்து இப்படத்தை கெளதம் மேனன் இயக்கி வருகிறார். படத்திற்கு இசையமைப்பாளர் யார் என்பது இதுவரை தெரியாமலேயே இருந்து வருகிறது. காதலர் தினமான பிப்ரவரி 14-ம் தேதி இப்படத்தை வெளியிட தீர்மானித்து இருக்கிறார்கள்.

Sunday, January 1, 2012

நண்பன் அமெரிக்கா வெளியீட்டு தகவல்

 
 
 
விஜய் நடிப்பில் ஜெனவரி 12ம் திகதி உலகம் முழுவதும் வெளிவர உள்ள படம் நண்பன். இதில் விஜய் பஞ்சவன் பாரிவேந்தனாகவும் ஜீவா சேவற்கொடி செந்திலாகவும் சிறிகாந்த் வெங்கட்ராமக்ரிச்னனாகவும் நடித்துள்ளனர். இப்படத்தின் முன்னோட்டம் வெளிவந்ததுமே அனைவருக்கும் படம் பார்க்கும் ஆசையை மேலும் அதிகரித்தது. இப்படத்தில் விஜயின் காதலியாக இலியான நடித்துள்ளார். இப்படம் நல்ல கதையுள்ள தமிழுக்கு ஏற்ற படமாக வெளிவர உள்ளது.
சத்தியராஜ் விருமாண்டி சந்தானமாக நடித்துள்ளார். இவரை வைரஸ் கிருமி என சிறிகாந்த் அடிக்கும் லூட்டி படத்துக்கு பிளஸ். இவர் இலியானாவின் தந்தையாகவும் பேராசிரியராகவும் வருகிறார்.
சங்கரின் கல்லுரி கலாட்டவை கொண்டு வெளிவர உள்ள படத்தின் அமெரிக்காவின் விபரங்களுக்கு கீழே உள்ள இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளவும்.
GK Media Inc.
Mohan @303-332-6852
nanban.usa@gmail.com

Popular Posts

Popular Posts