Monday, February 20, 2012

துப்பாக்கி படப்பிடிப்பு விரைவில் தொடங்கும்: விஜய்

 

துப்பாக்கி திரைப்படம் கை விடப்படவில்லை என்று நாயகன் விஜய் கூறியுள்ளார்.
கொலிவுட்டில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், கலைப்புலி தாணு தயாரிக்கும் துப்பாக்கியில் இளையதளபதி விஜய் நடிக்கிறார்.
துப்பாக்கி படப்பிடிப்பு மும்பையில் நடந்துவந்த நிலையில், தயாரிப்பாளர்-பெப்ஸி பிரச்சினை காரணமாக படப்பிடிப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் ஏ.ஆர்.முருகதாசும் குறும்படம் ஒன்றை தயாரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்.
இதனால் துப்பாக்கி கைவிடப்பட்டதாக பல்வேறு செய்திகள் வெளியாகி வருகின்றன. இது விஜய்யின் ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து விஜய் மற்றும் அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரனிடம் விசாரித்து வருகிறார்கள்.
சமீபத்தில் ஒரு நிகழ்ச்சிக்கு வந்த விஜய்யிடம் ரசிகர்கள் கேட்டதற்கு, துப்பாக்கி நிறுத்தப்பட்டு விட்டது என்று வெளிவரும் தகவல்களை நம்பவேண்டாம் என்று கூறியுள்ளார்.
தயாரிப்பாளர்-பெப்சி பிரச்சினை போன்றவையெல்லாம் தீர்ந்ததும் படப்பிடிப்பு தொடங்கிவிடும் என்று கூறினார்.

No comments:

Post a Comment

Popular Posts

Popular Posts